Type Here to Get Search Results !

13 கடவுள் கவிதைகள் | God Tamil Quotes

கடவுள் இருக்கிறாரா இல்லையா
என்பது சந்தேகமாக இருந்தாலும்,
கஷ்டம் வந்தவுடன் கடவுளே
என்று தான் சொல்கிறது மனது.
கஷ்டத்தை மனிதனிடம் சொல்வதை விட,
கடவுள் இருக்கிறார் என்று நம்பி
அவரிடம் சொல்வதே சிறந்தது.
1 of 13
God tamil quote

என் கண்களுக்கு விருந்து
படைக்கும் கூத்தாடியை விட,
என் வயிற்றுக்கு உணவு
படைக்கும் விவசாயி தான்
எனக்கு கடவுளாவான்.
2 of 13
விவசாயி கவிதை

பசித்த உயிருக்கு உணவளிப்பவன் கடவுள்.
தன் பசி பொறுத்து பிறர் பசி ஆற்றுபவன் கடவுள்.
கிடைத்ததை பகிர்ந்து உண்பவன் கடவுள்.
பிறர் துயர் துடைப்பவன் கடவுள்.
கடவுளை தேடாதே மனிதத்தை தேடு.
3 of 13
Kadavul tamil Kavithai

படைத்தவன் மட்டுமே கடவுள்
இல்லை.
மற்றவர் பசிக்காக
உழைப்பவனும் கடவுள் தான்.!
4 of 13
கடவுள் கவிதை

இறைவன் உனக்கென எழுதியதை
உலகமே சேர்ந்து தடுத்தாலும்,
அது உன்னை வந்தடைந்தே தீரும்.
இறைவன் உனக்கென எழுதாததை
உலகமே ஒன்று சேர்த்து உனக்கு கொடுக்க
நினைத்தாலும் அது உனக்குக் கிடைக்காது.
5 of 13
God tamil quote for life

எத்தனை தெய்வங்கள் பூமியில் இருந்தாலும்.!
உன்னோடு பேசும் தெய்வம் உன் தாய் தந்தை மட்டுமே.!
யோசித்து பார் உண்மை புரியும்.!
அன்போடு அவர்களிடம் பேசி பார் பாசம் தெரியும்...!
6 of 13
Tamil God quote

இறந்த கடவுளை காண வேண்டும்
என்றால் ஆலயம் செல்கிறோம்.
வாழும் கடவுளை காண வேண்டும்
என்றால் அனாதை இல்லம் செல்வோம்.
அங்கே தான் உயிருடன் வாழ்கிறார் கடவுள்.
7 of 13
அனாதை இல்லம்

கடவுள், கஷ்டம் என்ற புள்ளியை
சின்னதா வச்சு,
பிரச்சினை என்கிற கோலத்தை
பிரம்மாண்டமா போடறார்,
எல்லோர் வாழ்க்கையிலும்.
8 of 13
பிரச்சினை கவிதை

என்னை படைத்த பரம்பொருளே..!
நீ தூங்கும் போது பிறந்தவனோ நான்.
கஷ்டம் மட்டுமே என் வாழ்க்கை ஆனது.
இனியும் கஷ்டம் தாங்கும் சக்தி இல்லை.
உன் ஆசை போல் அமையட்டும் என் வாழ்வு.
9 of 13
Tamil prayer quote


எதிர்பார்ப்பை கடவுள் மேல் வை.
மனிதன் மேல் வைத்தால்,
ஒரு நாள் ஏமாற்றம் நிச்சயம்.
10 of 13
Ethirparppu

ஒருவரின் பசி என்ற நோய்
உன்னால் நீங்கினால் நீ தான் கடவுளடா.
ஒருவரின் வேலை இல்லா திண்டாட்டம்
உன்னால் நீங்கினால் நீ தான் கடவுளடா.
11 of 13
Kadavul kavithai

நல்லது செய்தாலும்
கெட்டது செய்தாலும்.
சிரிப்பை மட்டுமே
திருப்பி கொடுக்கும்
வரம் தா இறைவா.
எனக்கே அந்த வரம்
இன்னும்
கிடைக்கவில்லை.
உனக்கு எப்படி தருவதோ!
12 of 13
Kadavul varam Kavithai

கடவுள் நம்பியவனுக்கு கசப்பு கொடுப்பார்
நம்பாதவனுக்கு இனிப்பு கொடுப்பார்.
"ஆனால்"
இறுதியில் கசப்பு மருந்தாகும்.
இனிப்பு நோயாகும்...!
13 of 13
கடவுள் கவிதை

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. 🤔🤔🤔🤔arumaiyana pathivu🙏🙏🙏🙏

    ReplyDelete
  2. The last Quotes is super

    ReplyDelete

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad