Type Here to Get Search Results !

தமிழ் காதல் கவிதைகள் | Tamil Kadhal Kavithaigal - Stylish & Attitude [March 2024]

| Tamil Love Quotes | Tamil Kadhal Kavithai Sms | காதல் கவிதைகள் | Love Kavithai SMS | Love Poem In Tamil |

விட்டு விட்டு தான் நினைக்கிறேன்...
விட்டு விட தான் நினைக்கிறேன்...
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது...
உன் அழகான நினைவுகள்...
1 of 20

மை தீட்டி வந்தவளே...!
என் மனதை களவாடி சென்றவளே...!
மதி மயங்கி நின்றவனை...!
உன் மாய விழியால் வென்றவளே...!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே...!
நீ இமை சிமிட்டி பேசியதால்...!
என் இளமை சிதைந்து தான் போனதடி...!
இத்தனை அழகு உன்னிடம்...!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்...!
2 of 20


மாலை முடிந்தும் மறையாத சூரியன் - நீ..!
என் இதயத்தின் ஒளிவட்டம் - நீ..!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் - நீ..!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் - நீ..!
என் இரவுகளின் துளி வெளிச்சம் - நீ..!
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை - நீ..!
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை - நீ தான்..!
3 of 20


இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்...
பதில் நானும் தரும் முன்பே...
கனவாகி கலைந்தாய்...!
- என்னை நோக்கி பாயும் தோட்டா
4 of 20
ennai nokki paayum thotta status image


நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன்.
நம் காதல் தான் ஒன்று சேரவில்லை.
நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும்...!
5 of 20

உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு.
ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன்
இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்.
6 of 20

அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்...!
7 of 20

நிழலே வீழும் இருளாயினும்.
நீ என்ற ஒற்றை நம்பிக்கையில்
கை வீசி முன் நகர்கின்றேன்.
உடன் வருகிறாய் தானே...?
8 of 20


விடியலுக்கும் விழித்தலுக்கும்
இடையே உள்ள நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன
உன் நினைவுகள்டா...
9 of 20

உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால் அது
உனக்கான இதயமாக இருக்காது...!
10 of 20


உனக்கும் எனக்குமான அதிகபட்ச
எல்லைகளெல்லாம் தாண்டிவிட்டேன்.
இதற்கு மேல் பொறுமையில்லை
ஏதாவது ஒன்று சொல்.
பொறுப்பதா? இருப்பதா? இறப்பதா?
11 of 20

நினைவுகள் பல சுமக்கும் இதயம்.
கனவுகள் பல காணும் மனது..
நீங்காமல் அலை மோதும் நினைவு...
உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் நினைவு...!
12 of 20



அன்று உன்னை மீண்டும் பார்க்க வேண்டும்
என்று தூக்கத்தை தொலைத்தேன்.
இன்று உன் நினைவுகளுடன்
துக்கத்தை தொலைக்க முயற்சிக்கிறேன்.
13 of 20

ஒரு பூவாக நீ மலர்கிறாய்...
ஒரு வண்டு போல் நான் நுழைகின்றேன்...
தேன் தேடும் வண்டுகள் போல் நான் இல்லை...
நீ சம்மதம் சொல்லும் வரை...
14 of 20

நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை.
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ...!!!!!
15 of 20


உன்னை உண்மையாக நேசித்த
இதயத்தை விட்டு பிரிந்து விடாதே.
எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும்.
அந்த ஒரு இதயம் போல் ஆகாது...!
16 of 20


உன்னை சிறைபிடிக்க நினைத்து
நான் கைதி ஆனேன்
உன்னிடம்.
17 of 20

உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் உளறுகிறேன்...!
கேட்பவர்கள் அதனை கவிதை  என்கிறார்கள்...!
18 of 20


ஒவ்வொரு நொடியும் கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலைகள் போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து சொல்லுதடி கண்ணீரில்...
19 of 20

நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே.
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே...
20 of 20

Top Post Ad

Below Post Ad