Kadhal Kavithai For Lover | Kadhal Kavithai For Wife | காதல் கவிதைகள்
நித்தம் ஒரு கவிதையால்
நீ ஜனனம் ஆகிறாய்...!
புத்தம் புது புன்னகையால்
நான் கவிஞன் ஆகிறேன்...!
1 of 25
உன் முகம் பார்த்து விட்டால் போதும்,
பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன்.
வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து.
2 of 25
எழுத இடம் கொடுத்தால் எழுதிடுவேன்.
கவிதையினை முத்தமாய்.
மொத்தமாய்...!
3 of 25
முகம் பார்த்து வந்த காதல்
மறைந்து விடும்.
பணம் பார்த்து வந்த காதல்
பறந்து விடும்.
உள்ளம் பார்த்து வந்த காதல்
உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும்.
4 of 25
யார் இந்த தேவதை...!
உறங்கும் விழிகளுக்குள் கனவை கொண்டு வருவது.
கனவை தந்து விட்டு என் நினைவை கொண்டு செல்கிறாள்.
கனவுலகிலயே என்னை சஞ்சரிக்க வைக்கிறாள்.
கற்பனையில் என்னை மிதக்க வைக்கிறாள்.
யார் இந்த தேவதை...!
5 of 25
வழி பார்த்து நடக்காமல்,
உன் விழி பார்த்து நடந்ததால்.
வழுக்கி விழுந்தேன் அடி
காதல் என்னும் பள்ளத்தில்...!
கை தூக்கி விடுவாயா கரைசேர.?
6 of 25
அன்று நான் தனியாக இருந்தாலும்
உன் நினைவின்றி நிம்மதியாக இருந்தேன்!
இன்று கூட்டத்திற்குள் நின்றாலும் உன் நினைவால் தனியாக உணர்கிறேன்!
7 of 25
உன் பார்வையில் பற்றி எரியும் தீக்குச்சி நான்.
எரிந்து கொண்டே இருப்பேன்.
நீ திரும்பிவந்து அனைக்கும் வரை அல்ல.
நீ விரும்பிவந்து அணைக்கும் வரை.
8 of 25
உன் மீதான என் காதலை
வார்த்தையில் சொல்வதை விட.
வாழ்ந்து காட்டுவதே சிறப்பு....???
9 of 25
நீயோ அதிசயமானவள்.
நான் அந்த அதிசயத்தை
கற்கும் அதிசய மாணவன்.
10 of 25
உன்னுடன் பேசும் போது
நாட்கள் இப்படியே நீளாதா
என்று ஒரு ஏக்கம் என் மனதில்.
11 of 25
அரை நொடி வாழ்ந்தாலும் உன்
அரவணைப்பில் நான் வாழ வேண்டும்.
அடுத்த நொடி மரணம் வந்தாலும்
உன் மார்பில் சாய்ந்து நான் சாக வேண்டும்.
12 of 25
உன் குறும்பு பேச்சில் தொலைந்து
போனதடி என் இரும்பு இதயம்...!
உனக்கு பிடிக்கிறதா பிடிக்கலையா
தெரியாமலே ரசிக்குதடி என்
இதயம் உன்னை...!
13 of 25
நீ கடல் கடந்து போனாலும்,
கடல் தாண்டியும் வருவேனடி
உன்னை கவர்ந்து செல்ல💞...!
14 of 25
எட்டிப் பார்த்தேன்.
தட்டிப் பறித்து விட்டாய்.
என் குட்டி இதயத்தை💖💘....!
15 of 25
உலகில் உள்ள அனைத்து பூக்களின்
வாசங்களும் சற்று குறைவு தான்.
உன் கூந்தல் சூடி பின் வாடிப்போன
அந்தப் பூக்களின் வாசத்தின் முன்..!
16 of 25
மானும் மீனும் வாழும் கண்ணில்
என்னை வைத்தாய்.
தேனும் பாலும் ஊறும் சொல்லில்
அன்பை வைத்தாய்.
ஊனும் உயிரும் எல்லாம் எந்தன்
உறவில் வைத்தாய்.
ஈர் உயிரை ஓர் உயிராக்கி
புத்துயிர் தந்தாய்.
17 of 25
எழுதிட முடியவில்லை எழுதி எழுதி
எழுது கோலும் ஏங்கி போனது.
கவி வரிகளும் நீண்டு போனது.
உன் அழகை கண்டு💃🖋️...!
18 of 25
வாசலில் உன் கை பதித்த
கோலத்தை விட,
உன் கால் பதித்த கோலம் அழகு.
19 of 25
அன்பே! உன்னை விட அழகி
யாரும் இல்லை என்று,
அந்த கிளியோபாட்ரா விடம்
சொன்னால் கூட தவறில்லை.
20 of 25
நீர் இன்றி அமையாது இவ்வுலகம்.
நீ இன்றி அமையாது என் உலகம்.
21 of 25
உன் காந்த பார்வையால்
எனை சுண்டி இழுக்கிறாய்.
சிலிர்த்தது என் நெஞ்சம்.
அடைந்தேன் உன்னிடம் தஞ்சம்.
22 of 25
வானில் நிலவை காணவில்லையாம்
விண்மீன்கள் என்னிடம் சொன்னது.
நான் எப்படி சொல்வது!
நிலவு என்னுடன் இருப்பதை...!
23 of 25
உன் விழி கொண்டு
கவிதைகளை வீசி
என் இதயம் திருடும்
இந்த பிரபஞ்சத்தின்
பேரழகி நீ...!
24 of 25
மழை வந்ததும் கப்பல் வடித்து
அனுப்பும் சிறுபிள்ளை போல்,
உன் நினைவு வந்ததும் கவிதை
வடித்து அனுப்புகிறேன் உனக்கு.
25 of 25
LOVE QUOTES IMAGE ENGLISH @Picsquote.Com
Thanks For Your Comment...