Type Here to Get Search Results !

நீரே நீரே எல்லாம் இங்கு தண்ணீரே

தண்ணீரே அருமருந்து தவறாமல்
அதை தினம் நீ அருந்து!
நீர் இன்றி அகம், புறம் தூய்மை இல்லை!
அதையறிந்து அவ்வப்போது நீர் நீ அருந்து!
இரண்டு முதல் மூன்று லிட்டர் தினம் நீர் நீ அருந்து!
நோய்கள் பலவற்றிற்கு அதுவே அருமருந்து!
நீர் இன்றி இவ்வுடலும் கிடையாது!
நீர் இன்றி எவ்வுயிரும் கிடையாது!
நீர் இன்றி இவ்வுலகமும் கிடையாது!
நீரே நீரே எல்லாம் இங்கு நீரே!
தண்ணீர் இல்லை கண்ணீரே!
உணர்வீரே! அறிவீரே! தெளிவீரே!
நாளும் பாதுகாத்து பருகிடுவீரே!
நலமுடன் வாழ்ந்திடுவீரே!
-இரா.இரகுநாதன்

தண்ணீர் கவிதை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad