Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 123 - பொழுதுகண்டு இரங்கல் - ஸ்டேட்டஸ்

குறள் 1221:
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
மு.வ உரை:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!

Thirukkural 1221 Status

Kaalai Vanakkam Thirukkural

குறள் 1222:
புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை
மு.வ உரை:
மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?

திருக்குறள் 1222 ஸ்டேட்டஸ்

Kaalai Vanakkam Thirukkural

குறள் 1223:
பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்
மு.வ உரை:
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

திருக்குறள் 1223 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam

குறள் 1224:
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்
மு.வ உரை:
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது (என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

Thirukkural 1224 Status

Thirukkural Kaalai Vanakkam

குறள் 1225:
காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை
மு.வ உரை:
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?

Thirukkural 1225 Status

Thirukkural Kaalai Vanakkam

குறள் 1226:
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்
மு.வ உரை:
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

Thirukkural 1226 Status

Kaalai Vanakkam Thirukkural

குறள் 1227:
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்
மு.வ உரை:
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

திருக்குறள் 1227 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam

குறள் 1228:
அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை
மு.வ உரை:
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

திருக்குறள் 1228 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam

குறள் 1229:
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து
மு.வ உரை:
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

Thirukkural 1229 Status

Thirukkural Kaalai Vanakkam

குறள் 1230:
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர்
மு.வ உரை:
(பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.

Thirukkural 1230 Status

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad