Type Here to Get Search Results !

வாழ்க்கை கவிதை ஸ்டேட்டஸ்

மதித்தால் மலராக இரு.
மிதித்தால் முள்ளாக இரு.
1 of 30
Tamil Quote for life

சில நினைவுகள் வராமல் இருக்கும் வரை
நாம் அணிந்திருக்கும்
சந்தோஷம் என்ற முகமூடி
சங்கடம் இல்லாமல் இருக்கிறது.
2 of 30
Sad life quote Tamil

பிறக்கும் போது உனக்கு இல்லாத பெயர்,
நீ இறக்கும் போது உன்னுடன் இருக்கும்.
நீ மண்ணை தேடினாலும்,
உன் பெயர் மண்ணில் வாழ்வது உன் கையில்.
3 of 30
Tamil quote image

நான்கு பேர் அறிய செய்தால்:
அது விளம்பரம்.
நான்கு பேர் அறியாது செய்தால்:
அது தான் உதவி.
4 of 30
உதவி கவிதை

எதுவுமே இல்லை என்று வருத்தம்
கொள்ளாதே நண்பா.
எதுவுமே இல்லாத நிலையில் தான்
உறவையும் உலகத்தையும்
முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
5 of 30
ஆறுதல் கவிதை

தேவையின்றி வாயைத் திறக்காதே!
பழி போட்டு வழியை அடைக்க பலர் உண்டு.
தூண்டி விட்டு தூண்டிலில் சிக்க
வைக்கவும் சிலர் உண்டு.
தேவையின் போது வாயை மூடாதே!
6 of 30
அமைதி கவிதை

குறைக்கும் நாயை கண்டு ஒதுக்கி
போவது பயத்தில் அல்ல.
அது நாய் என்பதால் தான். ஆனால்,
ஒதுங்கி செல்ல செல்ல அதன் குறைப்பு
அதிகமானால் "அடச்சீ சூ நாயே"
என்று விரட்டும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
7 of 30
நாய் கவிதை


ஒரு கதையை ஒருவன் பிடிக்கவில்லை
என்று சொன்னால்,
அது கதையின் பிழையாகத் தான்
இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
பார்த்தவனின் பார்வையின்
பிழையாகக் கூட இருக்கலாம்.
8 of 30
கதை கவிதை

சில நினைவும், பல கனவும்,
சில கற்பனையும் தான்
வாழ்க்கையை வாழ
உதவுகிறது இங்கு.
9 of 30
Valkkai Kavithai Image

மண்ணின் கீழ் அடங்கும் வரை
மண்ணின் மேல் அடக்கமாக இருப்போம்.
ஏனெனில், தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும்
இடைப்பட்டது தான் வாழ்க்கை.
10 of 30
அடக்கம் கவிதை

நிழல் தரும் மரமாக இரு நண்பா.
ஆனால், பாசம் என்னும் வேர்
உன் கழுத்தை தடவாமல்
பார்த்துக் கொள்.
11 of 30
Pasam Kavithai

மனிதர்களுக்கு
வசதி, வாய்ப்பு வந்ததும்
வருகின்ற முதல் நோய்,
"பார்வைக் குறைபாடு"
12 of 30
வசதி வாய்ப்பு

இந்த உலக வாழ்க்கையில்
எதிர்பார்த்தது என்னமோ
அன்பை மட்டும் தான்.
ஆனால் கிடைத்தது என்னமோ
வலியும், வேதனையும் மட்டுமே.
13 of 30
Tamil valkkai kavithai status


'முடி' உதிர்வது, 'முடி' நரைப்பது,
'பல்' உதிர்வது எல்லாம் கடவுள்
மனிதனுக்கு போடும் ஞாபக கடிதங்கள் போலும்!
14 of 30
Valkkai thathuvam

யோசித்துக் கொண்டே இருந்தால்
வாழ்க்கை முடிந்துவிடும்.
யோசிக்கவே இல்லை என்றால்
வாழ்க்கை அழிந்துவிடும்.
15 of 30
Valkkai Kavithai Image

செல்லும் வழி தவறென்று உணர்ந்து
விட்டால் தப்பித்து செல்ல வழி தேடு.
அங்கேயே நின்று அடம் பிடித்தால்,
இந்த உலகம் நம்மை அடக்கிவிடும்.
16 of 30
Tamil life quote

வாழ பிடிக்காமல் விஷம்
குடித்தவன் பிழைத்துக் கொள்கிறான்.
வாழ வேண்டும் என்று மருந்து
குடித்தவன் இறந்து போகிறான்.
இதுதான் வாழ்க்கை!
நம் கையில் எதுவும் இல்லை!
17 of 30
Valkkai Unmai Kavithai

வார்த்தை நான்கு பக்கமும்
கூர்மையுள்ள வாள் போன்றது.
பார்த்து வீசாவிடில் சுற்றி இருப்பவருடன்,
நம்மையும் சேர்த்து அழித்துவிடும்.
18 of 30
Tamil advice quote

தோன்றியதை எல்லாம் பேசிவிட்டு
பிறகு யோசிப்பதை விட,
பேசும் முன் யோசித்து பேசினால்
யாருக்கும் கஷ்டம் இருக்காது.
19 of 30
Tamil advice Kavithai


இனிப்பு மட்டுமே இருந்தால்
ஒரு நாள் திகட்டி விடும்.
அவ்வப்போது கசப்பும் இருக்கட்டும்.
இது வயிற்றுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும்.
20 of 30
Tamil quote for life

நாம் தேர்ந்தெடுத்த எல்லா பாதைகளும்
நாம் நினைத்த இடத்தில் கொண்டு
சென்று விடுவதில்லை.
வழி தவறிய பாதைகள் தான்
வாழ்க்கையின் அறிய பக்கங்களை
அறிந்து கொள்ள உதவுகிறது.
21 of 30
Unmai Kavithai Image

வாழ்க்கையில் சிலர் தன் பலத்தை
பயன்படுத்தி சாதிக்கின்றனர்.
சிலர் பிறர் பலவீனத்தை
பயன்படுத்தி சாதிக்கின்றனர்.
22 of 30
Tamil life quote

உலகில் மிக எளிய விஷயம்
பிறர் குறைகளை உணர்வது.
கடினமான விஷயம் தன்
குறைகளை தான் உணர்வது.
23 of 30
Tamil true lines

இறைவன் நமக்கு கண்களை
கொடுத்தது அடுத்தவர்
குறைகளை கண்டுபிடிக்க அல்ல.
அடுத்தவர் குறை கண்டு தன்
குறையை திருத்திக் கொள்ள.
24 of 30
Tamil quote for life

சிலரையும், சிலவற்றையும்
திருத்த முடியாது. இருப்பினும்
அப்படியே விட்டுவிடுவோம்
என்று விடவும் முடியாது.
25 of 30
Tamil quote image


பிடித்தவருக்கு
சுத்திப் போடுங்கள்,
சுத்தியலால் போட்டுவிடாதீர்கள்.
26 of 30
Tamil quote image

வாழ்க்கையில் யாரும் தோற்ப்பதில்லை.
தோற்றாலும் வென்றாலும் புது
அனுபவத்தை கற்றுக் கொள்கிறோம்,
இல்லை பெற்றுக் கொள்கிறோம்.
27 of 30
Tholvi Kavithai Image

லட்டு உடைந்து விட்டால் சங்கடப்படாமல்,
பூந்தி கிடைத்து விட்டது என்று
சந்தோஷப்பட்டால், வாழ்க்கை
சந்தோஷமாக இருக்கும்.
28 of 30
Tamil quote image

எல்லாம் என்னுடையது என்று வாழ்ந்து,
எதுவும் என்னுடையது இல்லை
என்று உணர்ந்து முடிவது
தான் நம் வாழ்க்கை.
29 of 30
Valkkai status

போதனையின் போது புரிந்து
கொள்ள முடியாத அனைத்தும்,
சோதனையின் போது புரிகிறது.
30 of 30
Tamil quote image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad