Type Here to Get Search Results !

வாழ்க்கை கவிதைகள் ஸ்டேட்டஸ்

வாழ்க்கை கற்றுக் கொடுக்கும்
மதிப்பு மிக்க பாடங்களுக்கு,
நன்கொடை வசூலிப்பதும் இல்லை,
சீர்வரிசை கேட்டு கையேந்துவதும் இல்லை.
1 of 18
Tamil quote for life

பலரும் பழகியதற்கான பலனை அடைந்த பிறகு, பிரிவதற்கான காரணத்தை தேடத் துவங்கி விடுகின்றனர்.
2 of 18
Valkkai Unmai

அருகில் இருப்பவர்களின்
அன்பை உணராமல்,
பார்க்க முடியாதவர்களிடம் பாசத்தை
எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்.
3 of 18
Valkkai Unmai Kavithai

கொடுத்துக் கொண்டே இருந்தால் நல்லவன்.
திரும்பிக் கேட்டால் கெட்டவன்.
"பணமானாலும்" "பாசமானாலும்" அதுவே.
4 of 18
Panam paasam Kavithai

பிடித்தபடி வாழ்க்கை அமைந்து
வாழ்பவன் அதிர்ஷ்டசாலி.
அமைந்த வாழ்க்கையை பிடித்தபடி
அமைத்து வாழ்பவன் புத்திசாலி.
5 of 18
Valkkai thathuvam

உயிர் உள்ள பறவைக்கு புழு உணவு.
உயிரற்ற பறவை எறும்புக்கு உணவு.
காலமும், நேரமும், சூழலும்
எப்போது எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
6 of 18
வாழ்க்கை உண்மை கவிதை

எல்லாரிடமும் எல்லாவற்றையும்
சொல்லி விடாதீர்கள்.
முழுவதும் வாசித்த பின் புத்தகம்
மூலைக்கு சென்று விடும்.
7 of 18
Valkkai Unmai Kavithai


ஏழையை மறந்தும் ஏளனமாக பார்த்துவிடாதே.
ஏன் என்றால்:
சொர்க்கத்தின் செல்வந்தர் பூமியின் ஏழை.
சொர்க்கத்தின் ஏழை பூமியின் செல்வந்தன்.
8 of 18
Tamil quote image

அழகில்லாமல் யாரையும் கடவுள்
படைக்கவில்லை இதுவரை.
ஆனால் ரசனை இல்லாமல் பலபேரை
படைத்து அனுப்பி விட்டான் தவறுதலாக.
9 of 18
Tamil Valkkai thathuvam

ஆணும் ஆணியும் ஓன்று தான்.
வளைந்து கொடுத்தால்
விழும் அடி குறைவு.
இல்லை விழும் அடிகள் நிறைவு.
10 of 18
Tamil life quote

நமக்கு மேலே உள்ளவனை பார்த்தால்,
தாழ்வு மனப்பான்மை தானே வரும்.
நமக்கு கீழே உள்ளவனை பார்த்தால்,
தலைக்கனம் தானே வரும்.
நம்மை யாரோடும் ஒப்பிடாமல்
நம்மை நாமே பார்த்துக் கொண்டால்,
தன்னம்பிக்கை தானே வரும்.
11 of 18
Tamil Valkkai Unmai

புகழ்ச்சி பூக்களாக தூவும் போது
காதுகள் செவிடாகி விடட்டும்.
இகழ்ச்சி இடியாக இறங்கும் போது
வாய் ஊமையாகி விடட்டும்.
12 of 18
Tamil quote for life


ஒருவர் நம்மை மதிக்கவில்லை
என நினைப்பது தவறு.
அவருக்கு நம்முடைய மதிப்பு
தெரியவில்லை என்பது உண்மை.
13 of 18
Tamil quote image

காண்பவருக்கு எல்லாம் நாம் அழகாய்
தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை.
அப்படி தெரிய நாம் பொம்மையுமில்லை.
நாம் நேசிப்பவருக்கும் நம்மை நேசிப்பவருக்கும்
மட்டும் அழகாய் தெரிந்தால் போதும்.
14 of 18
வாழ்க்கை உண்மை

ஏதாவது சாதிக்க விரும்பினால்
அதை துணையின்றி தனியாக
முயன்று சாதிக்க பார். ஏனெனில்,
நாம் துணை என நினைக்கும் சிலர்
நம் வாழ்வின் வினையாகக் கூடும்.
15 of 18
Tamil quote image

போதித்த புத்தனும் புத்தகமும் சொல்லி தந்தது:
"வாழும் வாழ்க்கையை நேர்மையா வாழவேண்டும்" என்று.
வாழ்ந்த வாழ்க்கை சொல்லி தந்தது:
"நேர்மையா இருந்தா வாழவே முடியாது" என்று.
16 of 18
அனுபவம் கவிதை

தேடல் ஆரம்பிக்கும் முன்
கிடைத்து விட்டால்
அதன் மதிப்பை இழந்துவிடுகிறது
பணமும் நல்ல மனமும்.
17 of 18
Valkkai Kavithai Image

படித்த கேள்வி பக்கத்து வினாத்தாளில் இருக்கும்.
படிக்காத கேள்வி நம் வினாத்தாளில் இருக்கும்.
இது தான் வாழ்க்கை.
18 of 18
Valkkai Kavithai Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad