Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 112 - நலம் புனைந்து உரைத்தல் - ஸ்டேட்டஸ்

*குறள் 1111:* நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் *மு.வ உரை:* அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.

Thirukkural 1111 status

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1112:* மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று *மு.வ உரை:* நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.

திருக்குறள் 1112

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1113:* முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு *மு.வ உரை:* மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

Thirukkural 1113

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1114:* காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று *மு.வ உரை:* குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

Thirukkural 1114

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1115:* அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை *மு.வ உரை:* அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

திருக்குறள் 1115

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1116:* மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன் *மு.வ உரை:* விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.

Thirukkural 1116

Thirukkural Kaalai Vanakkam Image



*குறள் 1117:* அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து *மு.வ உரை:* குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளது போல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ இல்லையே.

Thirukkural 1117

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1118:* மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி *மு.வ உரை:* திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

Thirukkural 1118

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1119:* மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி *மு.வ உரை:* திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

Thirukkural 1119

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1120:* அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் *மு.வ உரை:* அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

Thirukkural 1120

Thirukkural Kaalai Vanakkam Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad