Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 111 - புணர்ச்சி மகிழ்தல் - ஸ்டேட்டஸ்

*குறள் 1101:* கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. *மு.வ உரை:* கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

Thirukkural 1101 status

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1102:* பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து. *மு.வ உரை:* நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

திருக்குறள் 1102 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1103:* தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. *மு.வ உரை:* தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.

திருக்குறள் 1103 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1104:* நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள். *மு.வ உரை:* நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

திருக்குறள் 1104 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1105:* வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். *மு.வ உரை:* மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

Thirukkural 1105 status

Thirukkural Kaalai Vanakkam Image




*குறள் 1106:* உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தின் இயன்றன தோள். *மு.வ உரை:* பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

திருக்குறள் 1106 ஸ்டேட்டஸ்

திருக்குறள் காலை வணக்கம்


*குறள் 1107:* தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. *மு.வ உரை:* அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

திருக்குறள் 1107 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1108:* வீழும் இருவர்க் கினிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.* மு.வ உரை:* காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

திருக்குறள் 1108 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1109:* ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். *மு.வ உரை:* ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

Thirukkural 1109 status

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1110:* அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. *மு.வ உரை:* செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

Thirukkural 1110 status

Thirukkural Kaalai Vanakkam Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad