Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 110 - குறிப்பறிதல் - ஸ்டேட்டஸ்

*குறள் 1091:* இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. *மு.வ உரை:* இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

திருக்குறள் 1091

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1092:* கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது *மு.வ உரை:* கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.



Thirukkural 1092

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1093:* நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர் *மு.வ உரை:* என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.

Thirukkural 1093

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1094:* யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால் தானோக்கி மெல்ல நகும் *மு.வ உரை:* யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

Thirukkural 1094

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1095:* குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் *மு.வ உரை: என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

Thirukkural 1095

Thirukkural Kaalai Vanakkam



*குறள் 1096:* உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும் *மு.வ உரை:* புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.



Thirukkural 1096

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1097:* செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு *மு.வ உரை:* பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

Thirukkural 1097

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1098:* அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும் *மு.வ உரை:* யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

Thirukkural 1098

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1099:* ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள *மு.வ உரை:* புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

Thirukkural 1099

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1100:* கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல *மு.வ உரை:* கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

Thirukkural 1100

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad