தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு பதில் சொல்ல அவசியமில்லை. நாய் குறைக்கிறது என்று சிங்கமும் குறைத்தால், அது அசிங்கமாகிவிடும், சிங்கத்திற்கு!
ஏறிப்போக வழிவிடு, ஆனால், உன்னை மிதித்து விட்டு, ஏறிப்போக வழி விடாதே.
இந்த உலகமே உனக்கு எதிராக நின்றால், நீ அப்படியே திரும்பி நில். இப்போது இந்த உலகமே உனக்கு பின்னால் நிற்கும்.
நண்பர் முன் அன்பை காட்டு, முதியவர் முன் பணிவை காட்டு, எதிரியின் முன் துணிவை காட்டு, துரோகியின் முன் வாழ்ந்து காட்டு.
முடிந்தது அவன் கதை என்று நினைக்கும் போது போராடி எழுந்து நில். பின் எதிரியும் எழுந்து நிற்பான், கை கட்டி பணிந்து நிற்பான், உன் முன்!
சிரிக்க வைத்து ரசித்தவன் நான், ஆனால், உலகம் அழவைத்து ரசிக்கின்றது என்னை. நல்லவனாக இரு தவறில்லை. ஆனால், நல்லவன் என்று காட்டிக் கொள்ளாதே.
ஒரு சிலருக்கு நாம் முக்கியமாக இருக்கலாம், ஆனால், பலருக்கு அவர்கள் காரியம் முடியும் வரை தான், அதன் பின் நமக்கு காரியமே நடந்தாலும், அவர்களுக்கு கவலையில்லை.
உன்னை நிராகரித்தவரும் உன்னை நேசிக்கும் நிலையை உருவாக்கு. அது தான் உன் ஆகப்பெறும் வெற்றி.
நான் பாச சுரங்கம். தோண்டுங்கள் சுரண்டாதீர்கள். தோண்டினால், நீங்கள் வசிக்கும் குகையாவேன். சுரண்டினால், உங்களை எதிர்க்கும் பகையாவேன்.
படியே இல்லாத நிலையிலும், அடுத்த அடியை எடுத்து வைக்க உன்னால் முடிந்தால், நீ தான் சாதனையாளன். உன்னை வெல்ல எவருமில்லை இங்கு.
மனசுக்கு பிடித்ததை செய்து விட்டு கடந்து செல். உன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல். யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ள அவசியம் இல்லை. ஏனெனில், யாரும் இங்கு உனக்காக மாறப்போவதில்லை.
நமக்கு நடக்காத வரை, அடுத்தவர் வாழ்வில் நிகழ்ந்த, சம்பவங்கள் அனைத்தும், பார்த்து விமர்சிக்கும் திரைப்பட காட்சிகள் போன்றது தான்.
அணுகுமுறை என்பது சிறிய விஷயம் தான். ஆனால் அது ஏற்படுத்துவது மிகப்பெரிய மாற்றத்தை.
என் நடைமுறை உங்கள் செயல்முறையை பொறுத்து தான் அமையும். என் நடைமுறை உங்களை பாதித்தது என்றால், அது உங்கள் செயல்முறை என்னை பாதித்ததன் விழைவு தான்.
என் கௌரவம், சுயமரியாதையை இழந்தால் தான் அன்பு கிடைக்கும் என்றால்! அந்த அன்பு தேவையே இல்லை.!
முட்டாளுடன் பயணிக்கும் போது மௌனமே சிறந்தது.
நான் வழி தெரியாதவனும் அல்ல, முயற்சி இல்லாதவனும் அல்ல, பணம் என்ற ஒற்றை புள்ளியில் மாட்டிக்கொண்டு வழி இல்லாமல் விழி பிதுங்கி நிற்பவன் நான்.
ஏமாற்றி பிழைக்க விரும்பாமல், இயல்பு மாறாமல் வாழ்ந்தால், இந்த உலகத்துக்கு நான் பிழைக்க தெரியாதவன்.
நான் சலித்து பின் செல்பவன் அல்ல, எதுவாக இருந்தாலும் சாதித்து முன் செல்பவன்.
என்னை மதிக்காதவர்களை நான் ஒருபோதும் மதிப்பதில்லை. அது உங்களுக்கு திமிர். எனக்கு அது என் தன்மானம்.
தவறு என்றால் கற்றுக் கொண்டதை, கற்றுக் கொடுத்து, தட்டி கொடுங்கள். சுட்டிக்காட்டி திட்டி தீர்க்காதிருங்கள்.
எது இருந்தாலும் இல்லை என்றாலும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள், கவலை என்ற ஒன்றே இல்லாமல் போகும்.
எது இருந்தாலும் இல்லை என்றாலும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள், கவலை என்ற ஒன்றே இல்லாமல் போகும்.
வேரில் கசப்பு! இலையில் துவர்ப்பு! ஆனால், பழத்தில் இனிப்பு! காலம் பேசாது! பதில் சொல்லும்!
என் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கமும் நான் எழுதியது. வெற்றியோ தோல்வியோ நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் வழக்கம் போல் கை கட்டி வேடிக்கை பார்க்கலாம். தட்டி கொடுக்க வேண்டிய நேரத்தில், தட்டி விட்டவன் எல்லாம் வாய் மூடி இருத்தல் நலம்.
Thanks For Your Comment...