Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 101 நன்றியில் செல்வம் ஸ்டேட்டஸ்

*குறள் 1001:* வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்த தில். *மு.வ உரை:* ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

Thirukkural 1001

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1002:* பொருளானாம் எல்லாமென்றீயா திவறும் மருளானாம் மாணாப் பிறப்பு. *கலைஞர் உரை:* யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்.

Thirukkural 1002

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1003:* ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. *கலைஞர் உரை:* புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும்.

Thirukkural 1003

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1004:* எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன். *சாலமன் பாப்பையா உரை:* பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?

Thirukkural 1004

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1005:* கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய கோடியுண் டாயினும் இல். *சாலமன் பாப்பையா உரை:* தேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.

Thirukkural 1005

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1006:* ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன் றீத லியல்பிலா தான். *கலைஞர் உரை:* தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.

Thirukkural 1006

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1007:* அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. *சாலமன் பாப்பையா உரை:* ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.

திருக்குறள் 1007

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1008:* நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. *மு.வ உரை:* பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.

Thirukkural 1008 Status

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1009:* அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். *கலைஞர் உரை:* அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.

Thirukkural 1009

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1010:* சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து. *சாலமன் பாப்பையா உரை:* பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்.

Thirukkural 1010

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad