Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 98 பெருமை ஸ்டேட்டஸ்

குறள் 971: ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல். கலைஞர் உரை: ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.

Thirukkural 971 status

Thirukkural Kaalai Vanakkam


குறள் 972: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். சாலமன் பாப்பையா உரை: எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே. அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.


Thirukkural 972


குறள் 973: மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். மு.வ உரை: மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

Thirukkural 973

Kaalai Vanakkam Thirukkural


குறள் 974: ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. கலைஞர் உரை: தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.

Thirukkural 974

Thirukkural Kaalai Vanakkam


குறள் 975: பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை யுடைய செயல். சாலமன் பாப்பையா உரை: எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.

Thirukkural 975

Thirukkural Kaalai Vanakkam


குறள் 976: சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. மு.வ உரை: பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.

Thirukkural 976

Thirukkural Kaalai Vanakkam


குறள் 977: இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான் சீரல் லவர்கண் படின். சாலமன் பாப்பையா உரை: பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.

Thirukkural 977

Thirukkural Kaalai Vanakkam


குறள் 978: பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. சாலமன் பாப்பையா உரை: பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.

Thirukkural 978

Thirukkural Kaalai Vanakkam


குறள் 979: பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். சாலமன் பாப்பையா உரை: பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.

Thirukkural 979

Thirukkural Kaalai Vanakkam


குறள் 980: அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். சாலமன் பாப்பையா உரை: பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.

Thirukkural 980

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad