Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 99 சான்றாண்மை ஸ்டேட்டஸ்

*குறள் 981:* கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. *சாலமன் பாப்பையா உரை:* நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.

Thirukkural 981

திருக்குறள் காலை வணக்கம்


*குறள் 982:* குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத் துள்ளதூஉ மன்று. *கலைஞர் உரை:* நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்ல.

Thirukkural 982 status

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 983:* அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ டைந்துசால் பூன்றிய தூண். *கலைஞர் உரை:* அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.

Thirukkural 983

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 984:* கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. *கலைஞர் உரை:* உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.

Thirukkural 984 status

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 985:* ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. *மு.வ உரை:* ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

Thirukkural 985

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 986:* சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். *கலைஞர் உரை:* சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.

Thirukkural 986

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 987:* இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. *கலைஞர் உரை:* தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?

திருக்குறள் 987

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 988:* இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும் திண்மையுண் டாகப் பெறின். *கலைஞர் உரை:* சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.

Thirukkural 988

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 989:* ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக் காழி யெனப்படு வார். *கலைஞர் உரை:* தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.

Thirukkural 989

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 990:* சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான் தாங்காது மன்னோ பொறை. *சாலமன் பாப்பையா உரை:* சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.

Thirukkural 990

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad