Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 90 பெரியாரைப் பிழையாமை ஸ்டேட்டஸ்

*குறள் 891:* ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. *கலைஞர் விளக்க உரை:* ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.

Thirukkural 891

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 892:* பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா இடும்பை தரும். *மு.வ விளக்க உரை:* ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

Thirukkural 892

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 893:* கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. *கலைஞர் விளக்க உரை:* ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.

Thirukkural 893

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 894:* கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க் காற்றாதார் இன்னா செயல். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* அறிவு, செல்வம், படை ஆகிய மூன்று வகை ஆற்றலும் உடையவர்க்கு, அவை இல்லாதவர் முதலில் தீமை செய்வது தாமே எமனைக் கைநீட்டி அழைப்பதைப் போன்றது.

Thirukkural 894

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 895:* யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.

Thirukkural 895

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 896:* எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.

Thirukkural 896

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 897:* வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?

திருக்குறள் 897

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 898:* குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து *மு.வ விளக்க உரை:* மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

Thirukkural 898

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 899:* ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். *கலைஞர் விளக்க உரை:* உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.

Thirukkural 899

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 900:* இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின். *கலைஞர் விளக்க உரை:* என்னதான் எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும், தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க முடியாது.

Thirukkural 900

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad