Type Here to Get Search Results !

11 மழை கவிதைகள் ஸ்டேட்டஸ் | Mazhai kavithai Image

மழையே! மழையே! நீராவியாய் எழுகிறாய், பள பள என ஒளிர்கிறாய், இடி இடி என இடிக்கிறாய், சிலு சிலு என பொழிகிறாய், மனம் ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்க, சல சல என சாலையில் மனிதன் செய்த அசுத்தங்களை சுத்தம் செய்து செல்கிறாய்! -லைக்மைஸ்டேட்டஸ்
1 of 11
Mazhai kavithai Image



மழையே! மழையே! உன் வருகையால் மண் மணக்குது, நெல்மணி முளைக்குது, எங்கள் மனம் மகிழுது! மீண்டும் வரும் வரை கண்ணீர் தராமல் தண்ணீர் தந்து செல்! -அல்ஃபியோ
2 of 11
மழை கவிதை


மழையே! மழையே! நீராவியாய் எழுகிறாய், வானம் மத்தளம் இசைக்க, என் வீட்டு கூரையில் இசையாய் விழுகிறாய் நீ! -அல்ஃபியோ
3 of 11
Mazhai kavithai in tamil


விண் குளிர்ந்து, மண்ணை குளிர்வித்து, விளைவித்து, மனித மனதை மகிழ்வித்து, உலக உயிர்களுக்கு உணவளிக்கும், இயற்கையின் ஆக சிறந்த அற்புத "பரிசு மழை"! -அல்ஃபியோ
4 of 11
மழை ஸ்டேட்டஸ்


விண்ணின் முத்தே! மண்ணின் வித்தே! மக்களின் சொத்தே! கொட்டும் மழையே! உன் வர்ணஜாலத்தை ரசிக்க இரு விழிகள் போதாதே! -அல்ஃபியோ
5 of 11
Mazhai kavithai Image


மழை வந்தும் மனம் மகிழாமல் மன்றாடுகிறான் அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயி.
6 of 11
மழை விவசாயி கவிதை


மழை வருவது மண்ணை குளிர்விக்க, நம்மை மகிழ்விக்க. சுற்றி வளைத்து, சுற்றி அடைத்து, கான்கிரீட்டை விதைத்து விட்டு, மழையை குறை சொல்கிறான். நீ இடம் கொடுத்திருந்தால் அதுவும் இடம் கொடுத்திருக்குமே. -அல்ஃபியோ
7 of 11
மழை மனிதன் கவிதை


மழை காதல் கவிதைகள்


மழைத்துளி மண்ணில் விழும் முன் உன்னில் விழுந்ததோ! உன்னை காண்கையில் என்னில் மின்னல்!
8 of 11
Rain love quote tamil


என் விழிகள் உன் விழிகளை சந்தித்த தருணம், என் மனதில் ஆயிரம் வண்ண நட்சத்திரங்கள் மழையாக பொழிந்த தருணம்!
9 of 11
Kankal Kavithai Image


மழை நீர் போல் கண்ணீர் வழிகிறது. பார்த்தும் பார்க்காமல் கடந்து போக உன்னால் எப்படி முடிகிறது.
10 of 11
மழைத்துளி காதல் கவிதை


உன்னோடு சேர்ந்து நடந்த போது வராத மழை, உன்னை பிரிந்து நடக்கும் போது வருகிறது, என் கண்ணீரை மறைக்க.
11 of 11
மழை காதல் சோக கவிதை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad