Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 81 பழைமை ஸ்டேட்டஸ்

*குறள் 801:* பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. *கலைஞர் விளக்க உரை:* பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

Thirukkural 801



*குறள் 802:* நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற் குப்பாதல் சான்றோர் கடன். *மு.வ விளக்க உரை:* நட்பிற்க்கு உறுப்பாவது நண்பனுடைய உரிமைச் செயலாகும், அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.

Thirukkural 802

திருக்குறள் காலை வணக்கம்


*குறள் 803:* பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங் கமையாக் கடை. *கலைஞர் விளக்க உரை:* பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்.

Thirukkural 803



*குறள் 804:* விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். *கலைஞர் விளக்க உரை:* பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.

Thirukkural 804



*குறள் 805:* பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். *கலைஞர் விளக்க உரை:* வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Thirukkural 805



*குறள் 806:* எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. *கலைஞர் விளக்க உரை:* நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.

Thirukkural 806



*குறள் 807:* அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். *மு.வ விளக்க உரை:* அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.

Thirukkural 807



*குறள் 808:* கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். *கலைஞர் விளக்க உரை:* நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்.

Thirukkural 808



*குறள் 809:* கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. *மு.வ விளக்க உரை:* உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

Thirukkural 809



*குறள் 810:* விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். *மு.வ விளக்க உரை:* தவறே செய்த போதிலும், பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.

Thirukkural 810

Thirukkural Kaalai Vanakkam
ENGLISH QUOTES AND WISHES IMAGES

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad