Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 75 அரண் ஸ்டேட்டஸ்

*குறள் 741:* ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். *கலைஞர் விளக்க உரை:* பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.

Thirukkural 741

Kaalai Vanakkam Thirukkural



*குறள் 742:* மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண் *மு.வ விளக்க உரை:* மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.

Thirukkural 742

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 743:* உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல். *கலைஞர் விளக்க உரை:* உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.

Thirukkural 743

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 744:* சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* காவல் செய்யவேண்டிய இடம் சிறியதாயும், கோட்டையின் சுற்றுப் பெரியதாயும், சண்டையிட வரும் பகைவர்க்கு மலைப்பைத் தருவதாயும் அமைவது அரண்.

Thirukkural 744

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 745:* கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீர தரண். *மு.வ விளக்க உரை:* பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

Thirukkural 745

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 746:* எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும் நல்லா ளுடைய தரண். *கலைஞர் விளக்க உரை:* போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.

Thirukkural 746

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 747:* முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரிய தரண். *கலைஞர் விளக்க உரை:* முற்றுகையிட்டோ, முற்கையிடாமலோ அல்லது வஞ்சனைச் சூழ்ச்சியாலோ பகைவரால் கைப்பற்றப்பட முடியாத வலிமையுடையதே அரண் எனப்படும்.

Thirukkural 747

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 748:* முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வ தரண். *கலைஞர் விளக்க உரை:* முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.

Thirukkural 748

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 749:* முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண். *கலைஞர் விளக்க உரை:* போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளியிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்.

Thirukkural 749

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 750:* எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்ல தரண். *கலைஞர் விளக்க உரை:* கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.

Thirukkural 750

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad