Type Here to Get Search Results !

20 வாழ்க்கை மேற்கோள்கள்... Tamil Quote About Life With Image...

நம்மை சுற்றி இருப்பவர்களில்
பலர் பச்சோந்திகள் தான்
தங்கள் தேவைக்காக
நம் காலையும் பிடிப்பார்கள்
தேவை முடிந்த பின்
நம் கழுத்தையும் நெறிப்பார்கள்
1 of 20

நெருப்பு தான்
தங்கத்தை உருக்கி அழகாக்குகிறது...!
அதேபோல் துயரம் தான்
மனிதனை செதுக்கி உயர்வாக்குகிறது...!
2 of 20

வாழ்க்கையில் பிடித்தது எல்லாம்
கிடைப்பதும் இல்லை
கிடைத்தது எல்லாம் பிடித்தது போல்
மாற்ற முடிவதும் இல்லை
ஆனாலும் வாழ்கிறோம்
ஆயுள் முடியும் வரை வாழவேண்டும் என்பதற்காக
3 of 20

அங்கீகாரம் கிடைக்க வில்லை என்று வருந்தாதே
சாகசம் செய்பவனை டூப் என்றும்
டூப் போடுபவனை ஹீரோ என்றும்
கொண்டாடும் மக்கள் வாழும் சமூகம் இது
4 of 20


நிஜம் தான் வாழ்க்கைக்கு அழகு
அந்த நிஜத்தை விரும்புவது தான்
நம் ஒவ்வொருவருக்கும் அழகு
5 of 20



நம்ம வாழ்க்கையில்
ஒரு நாள் எல்லாம் மாறும்
ஆனால் எதுவும் ஒரே நாளில் மாறாது
நம் வாழ்க்கை பயணத்தை
தொடர்ந்து பயணிப்போம்
6 of 20

இறுதி பக்கம் இது தான்
என்று கூற முடியாத
தொடர் கதை தான்
நம் வாழ்க்கை
7 of 20

பழி சொல்ல தெரிந்த யாரும்
நமக்கு வழி சொல்ல போவதில்லை
நம் வாழ்க்கை நம் கையில்
8 of 20

காலம் ஒவ்வொரு துன்பத்திற்கு பின்பும்
கண்டிப்பாக ஏதோ ஒரு
மகிழ்ச்சியினை ஒளித்து வைத்திருக்கும்
9 of 20

வாழ்க்கையில் அன்பை
தருபவர்களை காட்டிலும்
அனுபவத்தை தருபவர்கள்
தான் அதிகம்
10 of 20



பக்குவம் என்பது
காயப்படுத்தியவர்களை
காயப்படுத்த வாய்ப்பிருந்தும்
காயப்படுத்தாமல் கடந்து செல்வதே...!
11 of 20

வாழ்க்கை சீட்டு ஆடுவதை போன்றது
தேவையானது
விழாவிட்டாலும்
விழுந்ததை வைத்து
திறமையால் சமாளிக்கவேண்டும்.
12 of 20

கோபம் வரும்போது வாயை மூடிக்கொள்.
குழப்பம் வரும்போது கண்களை மூடிக்கொள்.
தோல்வி வரும்போது காதுகளை மூடிக்கொள்.
13 of 20

முன்னேறி செல்லும் போது காதுகளை மூடிக்கொள்
இல்லையெனில் வீசும் வார்த்தைகளாலே
நீ விழுந்துவிடுவாய்...!
14 of 20

புயலுக்கும் பூகம்பத்துக்கும் இடையிலான
புரியாத போராட்ட பயணம் தான் வாழ்க்கை
15 of 20



வலி இல்லாத வாழ்க்கையும் இல்லை.
வழி இல்லாத வாழ்கையும் இல்லை.
வலிகள் கடந்து வழிகள் தேடுவோம்...!
16 of 20

நமக்கு நாம் மட்டும் தான் துணை
என்பதை ஒரு கட்டத்தில்
உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை
17 of 20

அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு
இருக்க வேண்டுமே தவிர
திருத்தி பார்க்கும் அளவிற்கு
இருத்தல் கூடாது நம் வாழ்க்கை
18 of 20

இருப்பவன் கோடியில் புரண்டாலும்
இல்லாதவன் தெருகோடியில் புரண்டாலும்
முடிவு என்னவோ இருவருக்கும் ஒன்று தான்.
19 of 20

இன்றைய உலகம்
உழைப்பவன் ஒதுக்கப்படுகிறான்...!
நடிப்பவன் மதிக்கப்படுகிறான்...!
ஏமாற்றுபவன் பாராட்டப்படுகிறான்...!
20 of 20

Top Post Ad

Below Post Ad