Type Here to Get Search Results !

இருக்கும் நொடியும் இறக்கும் நொடியும் | காதல் கவிதைகள் | Love Quotes In Tamil

நீ பார்த்த பார்வை...!
பாலை வனத்தின் தென்றல் காற்று.
வரண்ட நிலத்தின் முதல் துளி மழை.
1 of 13
Tamil love quotes

தொட்டுப் பேசாத நேசம்
விட்டுப் போகாது
எட்டிப் போனாலும்...!!!
2 of 13
தொட்டுப் பேசாத நேசம் விட்டுப் போகாது எட்டிப் போனாலும்...!!!



தூரமாய் நீ இருந்தாலும்.
என் சந்தோசத்தை பகிர்ந்திடவும்.
கவலையில் தோள் சாய்ந்திடவும்.
தவறாமல் என்னுள்ளே வந்து போகிறது.
உன் நினைவுகள்...!
3 of 13
தூரமாய் நீ இருந்தாலும். என் சந்தோசத்தை பகிர்ந்திடவும். கவலையில் தோள் சாய்ந்திடவும். தவறாமல் என்னுள்ளே வந்து போகிறது. உன் நினைவுகள்...!

யாரும் திறக்காத என் இதயத்தை
திறந்து வைத்தது உன் கடைக்கண் பார்வை.
கல்லாய் இருந்த இதயம் முதல் முறையாய்
பூவாய் மலர்ந்து உதிர்ந்ததும் உன்னிடம் தான்.
என் உயிரே...!
4 of 13
யாரும் திறக்காத என் இதயத்தை திறந்து வைத்தது உன் கடைக்கண் பார்வை. கல்லாய் இருந்த இதயம் முதல் முறையாய் பூவாய் மலர்ந்து உதிர்ந்ததும் உன்னிடம் தான். என் உயிரே...!

இரவு என்பது உன் நினைவுகளுக்காகவே
என்றான பின்.
உறக்கம் என்பது கனவாகி போனதடி எனக்கு.
5 of 13
இரவு என்பது உன் நினைவுகளுக்காகவே என்றான பின். உறக்கம் என்பது கனவாகி போனதடி எனக்கு.

காத்திரு..! உனக்காக பிறந்தவள் வருவாள்
மனைவியாக அதுவரை காத்திரு...!
அவளிடம் உன் இதயத்தை பறிகொடு
அவளின் கரம் பற்றி அவளுக்காகவே
உண்மையாய் வாழ்ந்திடு. அன்று புரியும்
காதல் வெறும் வார்த்தையல்ல..! வாழ்க்கை என்று...!
6 of 13
காத்திரு..! உனக்காக பிறந்தவள் வருவாள் மனைவியாக அதுவரை காத்திரு...! அவளிடம் உன் இதயத்தை பறிகொடு அவளின் கரம் பற்றி அவளுக்காகவே உண்மையாய் வாழ்ந்திடு. அன்று புரியும் காதல் வெறும் வார்த்தையல்ல..! வாழ்க்கை என்று...!



ஆழமான காதலில் உறைந்தவன் கவிஞனாகிறான்.
மறைந்து போன காதலில் சிதைந்தவன்
காவியங்களை படைக்கும் கலைஞனாகிறான்...!
7 of 13
ஆழமான காதலில் உறைந்தவன் கவிஞனாகிறான். மறைந்து போன காதலில் சிதைந்தவன் காவியங்களை படைக்கும் கலைஞனாகிறான்...!

என் காதல் என்னும் புத்தகத்தில்
நான் புரட்டிய பக்கங்கள் ஒவ்வொன்றிலும்
நீயும் உன் நினைவுகளுமே அச்சிடப்பட்டுள்ளன.
8 of 13
என் காதல் என்னும் புத்தகத்தில் நான் புரட்டிய பக்கங்கள் ஒவ்வொன்றிலும் நீயும் உன் நினைவுகளுமே அச்சிடப்பட்டுள்ளன.

தடுக்கி விடும் கல்லாக நீ இருந்தால்
தடுக்காமலே நான் விழுவேன்
உன் மீது...!
9 of 13
தடுக்கி விடும் கல்லாக நீ இருந்தால் தடுக்காமலே நான் விழுவேன் உன் மீது...!

காதலில் வெல்வதை விட தோற்பது சுகமே.
உன்னுடன் வாழ்வதை விட
உன் நினைவுகளுடன் வாழ்வதையே
விரும்புகிறேன் இப்போது சுகமான சுமையாக...!
10 of 13
காதலில் வெல்வதை விட தோற்பது சுகமே. உன்னுடன் வாழ்வதை விட உன் நினைவுகளுடன் வாழ்வதையே விரும்புகிறேன் இப்போது சுகமான சுமையாக...!

இருக்கும் நொடியும் இறக்கும் நொடியும்
உன்னோடு இருந்தால் போதும்...
துடிக்கும் போதும் தவிக்கும் போதும்
உன் அருகாமை இருந்தால் போதும்...
நினைக்கும் போதும் விலகும் போதும்
நீங்காமல் இருந்தால் போதும்...
நம் வாழ்க்கை அழகாகும் அழகே...!
11 of 13
இருக்கும் நொடியும் இறக்கும் நொடியும் உன்னோடு இருந்தால் போதும்... துடிக்கும் போதும் தவிக்கும் போதும் உன் அருகாமை இருந்தால் போதும்... நினைக்கும் போதும் விலகும் போதும் நீங்காமல் இருந்தால் போதும்... நம் வாழ்க்கை அழகாகும் அழகே...!

நம் இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும்
நேசித்த ஒருவரை மறப்பதில்லை.
காரணம் இறைவன் காதலை மறக்கும்
சக்தியை யாருக்கும் கொடுப்பதில்லை...!
12 of 13
நம் இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் நேசித்த ஒருவரை மறப்பதில்லை. காரணம் இறைவன் காதலை மறக்கும் சக்தியை யாருக்கும் கொடுப்பதில்லை...!

மரணத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
நீ என்னை ஒரு பொருட்டாக பார்க்க
மறந்ததில் இருந்து...!
13 of 13
மரணத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. நீ என்னை ஒரு பொருட்டாக பார்க்க மறந்ததில் இருந்து...!

Top Post Ad

Below Post Ad