Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 114 - நாணுத் துறவுரைத்தல் - ஸ்டேட்டஸ்

குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி மு.வ உரை: காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

Thirukkural 1131

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1132: நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து மு.வ உரை: (காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

Thirukkural 1132

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1133: நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல் மு.வ உரை: நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

Thirukkural 1133

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1134: காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு நல்லாண்மை என்னும் புணை மு.வ உரை: நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.

திருக்குறள் 1134

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1135: தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர் மு.வ உரை: மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

Thirukkural 1135

Thirukkural Kaalai Vanakkam Image



குறள் 1136: மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படலொல்லா பேதைக்கென் கண் மு.வ உரை: மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

Thirukkural 1136

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1137: கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் மு.வ உரை: கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

Thirukkural 1137

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1138: நிறையரியர் மன்னளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும் மு.வ உரை: இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.

Thirukkural 1138

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1139: அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம் மறுகின் மறுகும் மருண்டு மு.வ உரை: அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

Thirukkural 1139

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1140: யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு மு.வ உரை: யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

Thirukkural 1140

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad