Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 115 - அலர் அறிவுறுத்தல் - ஸ்டேட்டஸ்

குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் மு.வ உரை: (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

Thirukkural 1141

திருக்குறள் காலை வணக்கம்


குறள் 1142: மலரன்ன கண்ணாள் அருமை அறியா தலரெமக் கீந்ததிவ் வூர் மு.வ உரை: மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

Thirukkural 1142

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1143: உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து மு.வ உரை: ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

திருக்குறள் 1143 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1144: கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து மு.வ உரை: எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

Thirukkural 1144

Thirukkural 1144 Kaalai Vanakkam


குறள் 1145: களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது மு.வ உரை: காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

திருக்குறள் 1145

Thirukkural Kaalai Vanakkam Image



குறள் 1146: கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று மு.வ உரை: காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

Thirukkural 1146

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1147: ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய் மு.வ உரை: இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

திருக்குறள் 1147

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1148: நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் மு.வ உரை: அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

Thirukkural 1148

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1149: அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார் பலர்நாண நீத்தக் கடை மு.வ உரை: அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.

Thirukkural 1149

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1150: தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கௌவை எடுக்குமிவ் வூர் மு.வ உரை: யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

Thirukkural 1150

Thirukkural Kaalai Vanakkam Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad