Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 118 - கண் விதுப்பழிதல் - ஸ்டேட்டஸ்

குறள் 1171: கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது மு.வ உரை: தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?t

Thirukkural 1171 status

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1172: தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்ப தெவன் மு.வ உரை: ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

Thirukkural 1172

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1173: கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து மு.வ உரை: அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

திருக்குறள் 1173

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1174: பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து மு.வ உரை: என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

Thirukkural 1174

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1175: படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக் காமநோய் செய்தவென் கண் மு.வ உரை: அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

Thirukkural 1175

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1176: ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது மு.வ உரை: எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

Thirukkural 1176

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1177: உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண் மு.வ உரை: அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

Thirukkural 1177

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1178: பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணா தமைவில கண் மு.வ உரை: உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

திருக்குறள் 1178

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1179: வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் மு.வ உரை: காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

Thirukkural 1179

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1180: மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து மு.வ உரை: அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

திருக்குறள் 1180

Thirukkural Kaalai Vanakkam Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad