Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 117 - படர்மெலிந் திரங்கல் - ஸ்டேட்டஸ்

குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க் கூற்றுநீர் போல மிகும் மு.வ உரை: இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

Thirukkural 1161

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1162: கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க் குரைத்தலும் நாணுத் தரும் மு.வ உரை: இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

Thirukkural 1162

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1163: காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென் நோனா உடம்பின் அகத்து மு.வ உரை: துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.

திருக்குறள் 1163

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1164: காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல் மு.வ உரை: காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.

திருக்குறள் 1164

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1165: துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர் மு.வ உரை: (இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். (துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?

Thirukkural 1165

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1166: இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது மு.வ உரை: காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

Thirukkural 1166

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1167: காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன் மு.வ உரை: காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

Thirukkural 1167

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1168: மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்ல தில்லை துணை மு.வ உரை: இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

Thirukkural 1168

Thirukkural Kaalai Vanakkam


குறள் 1169: கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா மு.வ உரை: (பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.

திருக்குறள் 1169

Thirukkural Kaalai Vanakkam Image


குறள் 1170: உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோவென் கண் மு.வ உரை: காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

Thirukkural 1170

Thirukkural Kaalai Vanakkam Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad