Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 105 - நல்குரவு ஸ்டேட்டஸ்

*குறள் 1041:* இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. *மு.வ உரை:* வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

Thirukkural 1041

Thirukkural Kaalai Vanakkam

*குறள் 1042:* இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். *மு.வ உரை:* வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

Thirukkural 1042

Kaalai Vanakkam thirukkural


*குறள் 1043:* தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குர வென்னும் நசை. *மு.வ உரை:* வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

Thirukkural 1043

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1044:* இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். *மு.வ உரை:* வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

Thirukkural 1044

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1045:* நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். *சாலமன் பாப்பையா உரை:* இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.

Thirukkural 1045

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1046:* நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். *சாலமன் பாப்பையா உரை:* நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

Thirukkural 1046

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1047:* அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். *மு.வ உரை:* அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

Thirukkural 1047

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1048:* இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. *சாலமன் பாப்பையா உரை:* நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?

Thirukkural 1048

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1049:* நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பா டரிது. *மு.வ உரை:* ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

Thirukkural 1049 status

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1050:* துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. *மு.வ உரை:* நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

Thirukkural 1050

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad