Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 104 - உழவு ஸ்டேட்டஸ்

*குறள் 1031:* சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை. *மு.வ உரை:* உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

Thirukkural 1031

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1032:* உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை எல்லாம் பொறுத்து. *சாலமன் பாப்பையா உரை:* உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.

Thirukkural 1032 Status

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1033:* உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். *மு.வ உரை:* உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

Thirukkural 1033

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1034:* பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். *சாலமன் பாப்பையா உரை:* உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

Thirukkural 1034 Status

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1035:* இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். *சாலமன் பாப்பையா உரை:* தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

Thirukkural 1035

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1036:* உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கும் நிலை. *சாலமன் பாப்பையா உரை:* உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

திருக்குறள் 1036 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1037:* தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். *கலைஞர் உரை:* ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.

Thirukkural 1037

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 1038:* ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. *சாலமன் பாப்பையா உரை:* உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

திருக்குறள் 1038

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1039:* செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந் தில்லாளின் ஊடி விடும். *கலைஞர் உரை:* உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.

Thirukkural 1039

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1040:* இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும். *மு.வ உரை:* எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

Thirukkural 1040

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad