Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 107 - இரவச்சம் - ஸ்டேட்டஸ்

*குறள் 1061:* கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். *சாலமன் பாப்பையா உரை:* ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.

Thirukkural 1061 image

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 1062:* இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். *சாலமன் பாப்பையா உரை:* பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

திருக்குறள் 1062

திருக்குறள் காலை வணக்கம்


*குறள் 1063:* இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில். *சாலமன் பாப்பையா உரை:* இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.

திருக்குறள் 1063

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1064:* இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. *சாலமன் பாப்பையா உரை:* ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.

திருக்குறள் 1064

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1065:* தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த துண்ணலின் ஊங்கினிய தில். *சாலமன் பாப்பையா உரை:* நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.

Thirukkural 1065

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1066:* ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற் கிரவின் இளிவந்த தில். *சாலமன் பாப்பையா உரை:* பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.

திருக்குறள் 1066

திருக்குறள் காலை வணக்கம்


*குறள் 1067:* இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற் கரப்பார் இரவன்மின் என்று. *மு.வ உரை:* இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

Thirukkural 1067

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1068:* இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். *சாலமன் பாப்பையா உரை:* வறுமைக் கடலைக் கடந்துவிட ஏறிய பிச்சை என்னும் வலு இல்லாத தோணி இருப்பதை மறைத்தல் என்னும் பாறையில் மோதப் பிளந்துபோகும்.

Thirukkural 1068

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1069:* இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். *சாலமன் பாப்பையா உரை:* பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.

திருக்குறள் 1069

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1070:* கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். *சாலமன் பாப்பையா உரை:* இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?

Thirukkural 1070

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad