Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 108 - கயமை - ஸ்டேட்டஸ்

*குறள் 1071:* மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில். *சாலமன் பாப்பையா உரை:* கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.

Thirukkural 1071

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1072:* நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவலம் இலர். *மு.வ உரை:* நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.

திருக்குறள் 1072

திருக்குறள் காலை வணக்கம்


*குறள் 1073:* தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். *மு.வ உரை:* கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

Thirukkural 1073

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1074:* அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். *மு.வ உரை:* கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

Thirukkural 1074

திருக்குறள் காலை வணக்கம்


*குறள் 1075:* அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது. *மு.வ உரை:* கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

Thirukkural 1075

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1076:* அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான். *மு.வ உரை:* கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.

திருக்குறள் காலை வணக்கம்

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1077:* ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன்கையர் அல்லா தவர்க்கு. *சாலமன் பாப்பையா உரை:* தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.

Thirukkural 1077

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1078:* சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல கொல்லப் பயன்படும் கீழ். *மு.வ உரை:* அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

திருக்குறள் 1078

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 1079:* உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். *சாலமன் பாப்பையா உரை:* பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீது குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.

திருக்குறள் 1079

திருக்குறள் காலை வணக்கம்


*குறள்: 1080* எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. *மு.வ உரை:* கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.

Thirukkural 1080

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad