Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 95 மருந்து ஸ்டேட்டஸ்

*குறள் 941:* மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. *கலைஞர் உரை:* வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

திருக்குறள் 941 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 942:* மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி உணின். *சாலமன் பாப்பையா உரை:* ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

Thirukkural 942

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 943:* அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு. *கலைஞர் உரை:* உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்.

Thirukkural 943

திருக்குறள் காலை வணக்கம்


*குறள் 944:* அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. *மு.வ உரை:* முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.

Thirukkural 944

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 945:* மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபா டில்லை உயிர்க்கு. *மு.வ உரை:* மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.

Thirukkural 945

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 946:* இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய். *சாலமன் பாப்பையா உரை:* குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.

Thirukkural 946

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 947:* தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும். *சாலமன் பாப்பையா உரை:* தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.

Thirukkural 947

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 948:* நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். *கலைஞர் உரை:* நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும்.

Thirukkural 948

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 949:* உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். *சாலமன் பாப்பையா உரை:* மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.

Thirukkural 949

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 950:* உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து. *சாலமன் பாப்பையா உரை:* நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.

Thirukkural 950

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad