Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 94 சூது ஸ்டேட்டஸ்

*குறள் 931:* வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அன்று. *மு.வ உரை:* வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

Thirukkural 931

திருக்குறள் காலை வணக்கம்


*குறள் 932:* ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. *கலைஞர் உரை:* ஒரு வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?

Thirukkural 932

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 933:* உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம் போஒய்ப் புறமே படும். *சாலமன் பாப்பையா உரை:* சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.

Thirukkural 933

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 934:* சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன் றில் *மு.வ உரை:* ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

Thirukkural 934

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 935:* கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். *கலைஞர் உரை:* சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.

Thirukkural 935

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 936:* அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார். *கலைஞர் உரை:* சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.

Thirukkural 936

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 937:* பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். *சாலமன் பாப்பையா உரை: *சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.

Thirukkural 937

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 938:* பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத் தல்லல் உழப்பிக்கும் சூது. *கலைஞர் உரை:* பொருளைப் பறித்துப் பொய்யனாக ஆக்கி, அருள் நெஞ்சத்தையும் மாற்றித், துன்ப இருளில் ஒருவனை உழலச் செய்வது சூது.

Thirukkural 938

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 939:* உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும் அடையாவாம் ஆயங் கொளின். *மு.வ உரை:* சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.

Thirukkural 939

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 940:* இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற் றுயிர். *கலைஞர் உரை:* பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்.

Thirukkural 940

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad