Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 88 பகைத்திறம் தெரிதல் ஸ்டேட்டஸ்

*குறள் 871:* பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று. *மு.வ உரை:* பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் பொழுது போக்கும் விளையாட்டாக கூட சிறிதும் விரும்புதலாகாது.

Thirukkural 871

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 872:* வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. *சாலமன் பாப்பையா உரை: வில்லை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.

Thirukkural 872

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 873:* ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். *கலைஞர் உரை:* தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.

Thirukkural 873

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 874:* பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற் றுலகு. *மு.வ உரை:* பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

Thirukkural 874

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 875:* தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன் இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று. *கலைஞர் உரை:* தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

Thirukkural 875

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 876:* தேறினுந் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். *சாலமன் பாப்பையா உரை:* ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.

Thirukkural 876

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 877:* நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து. *சாலமன் பாப்பையா உரை:* நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

Thirukkural 877

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 878:* வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. *மு.வ உரை:* செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.

Thirukkural 878

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 879:* இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. *கலைஞர் உரை:* முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்.

Thirukkural 879

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 880:* உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். *கலைஞர் உரை:* பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.

Thirukkural 880

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad