Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 89 உட்பகை ஸ்டேட்டஸ்

*குறள் 881:* நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். *கலைஞர் விளக்க உரை:* இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும் அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.

Thirukkural 881

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 882:* வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. *கலைஞர் விளக்க உரை:* வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

திருக்குறள் 882

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 883:* உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர்.

Thirukkural 883

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 884:* மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும். *கலைஞர் விளக்க உரை:* மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்.

Thirukkural 884

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 885:* உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும். *மு.வ விளக்க உரை:* உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.

Thirukkural 885

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 886:* ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. *கலைஞர் விளக்க உரை:* ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்.

Thirukkural 886

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 887:* செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. *கலைஞர் விளக்க உரை:* செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.

Thirukkural 887

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 888:* அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு துட்பகை உற்ற குடி. *கலைஞர் விளக்க உரை:* அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.

Thirukkural 888

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 889:* எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு. *மு.வ விளக்க உரை:* எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.

Thirukkural 889

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 890:* உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போ டுடனுறைந் தற்று. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.

Thirukkural 890

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad