Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 78 படைச் செருக்கு ஸ்டேட்டஸ்

*குறள் 771:* என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர். *மு.வ விளக்க உரை:* பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள், என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நின்று கல்வடிவாய் நின்றவர் பலர்.


Thirukkural 771 status




*குறள் 772:* கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.

Thirukkural 772



*குறள் 773:* பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. *கலைஞர் விளக்க உரை:* பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும் அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.

Thirukkural 773

திருக்குறள் காலை வணக்கம்


*குறள் 774:* கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

Thirukkural 774

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 775:* விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு. *கலைஞர் விளக்க உரை:* களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.

Thirukkural 775



*குறள் 776:* விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்குந்தன் நாளை எடுத்து. *கலைஞர் விளக்க உரை:* ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.

Thirukkural 776



*குறள் 777:* சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. *கலைஞர் விளக்க உரை:* சூழ்ந்து பரவிடும் புகழை மட்டுமே விரும்பி உயிரைப் பற்றிக் கவலைப்படாத வீரர்களின் காலில் கட்டப்படும் வீரக்கழல் தனிப் பெருமை உடையதாகும்.

Thirukkural 777



*குறள் 778:* உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினுஞ்சீர் குன்றல் இலர். *மு.வ விளக்க உரை:* போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

Thirukkural 778



*குறள் 779:* இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* தாம் செய்த சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போராடி போர்க் களத்தில் தோற்றவரை இகழ்ந்து பேசுவார் உண்டோ!


Thirukkural 779



*குறள் 780:* புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா டிரந்துகோட் டக்க துடைத்து. *மு.வ விளக்க உரை:* தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

Thirukkural 780


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad