Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 79 நட்பு ஸ்டேட்டஸ்

*குறள் 781:* செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. *கலைஞர் விளக்க உரை:* நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

திருக்குறள் 781

காலை வணக்கம் திருக்குறள்



*குறள் 782:* நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

Thirukkural 782



*குறள் 783:* நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. *கலைஞர் விளக்க உரை:* படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

Thirukkural 783



*குறள் 784:* நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு. *கலைஞர் விளக்க உரை:* நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.

Thirukkural 784

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 785:* புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். *மு.வ விளக்க உரை:* நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

Thirukkural 785



*குறள் 786:* முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு. *மு.வ விளக்க உரை:* முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.


Thirukkural 786



*குறள் 787:* அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.


Thirukkural Kaalai Vanakkam

Thirukkural 787


*குறள் 788:* உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் தன் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

Thirukkural 788



*குறள் 789:* நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. *கலைஞர் விளக்க உரை:* மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.

Thirukkural 789



*குறள் 790:* இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. *மு.வ விளக்க உரை:* இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத்தன்மையானவர் என்று புனைந்துரைத்தால் நட்பு சிறப்பிழந்து விடும்.

Thirukkural 790


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad