Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 82 தீ நட்பு ஸ்டேட்டஸ்

*குறள் 811:* பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. *மு.வ விளக்க உரை:* அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

Thirukkural 811



*குறள் 812:* உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என். *கலைஞர் விளக்க உரை:* தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?

Thirukkural 812



*குறள் 813:* உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். *கலைஞர் விளக்க உரை:* பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.

Thirukkural 813



*குறள் 814:* அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. *கலைஞர் விளக்க உரை:* போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.

திருக்குறள் 814



*குறள் 815:* செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.

Thirukkural 815

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 816:* பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.

Thirukkural 816



*குறள் 817:* நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும். *கலைஞர் விளக்க உரை:* சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.

Thirukkural 817



*குறள் 818:* ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.

Thirukkural 818



*குறள் 819:* கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. *கலைஞர் விளக்க உரை:* சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்.

Thirukkural 819



*குறள் 820:* எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர் இருக்கும் சபையில் நம்மைப் பழிப்பவரின் தொடர்பைச் சிறிதளவும் சேரவிட வேண்டா.

Thirukkural 820


ENGLISH QUOTES AND WISHES IMAGES

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad