Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 76 பொருள் செயல்வகை ஸ்டேட்டஸ்

*குறள் 751:* பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* தகுதி அற்றவரையும் கூட தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.

Thirukkural 751

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 752:* இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. *கலைஞர் விளக்க உரை:* பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாகும்.

Thirukkural 752

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 753:* பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. *கலைஞர் விளக்க உரை:* பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது.

Thirukkural 753

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 754:* அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். *கலைஞர் விளக்க உரை:* தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.

Thirukkural 754

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 755:* அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். *மு.வ விளக்க உரை:* அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையென நீக்கிவிட வேண்டும்.

Thirukkural 755

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 756:* உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். *கலைஞர் விளக்க உரை:* வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.

Thirukkural 756

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 757:* அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* அன்பு பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை, பொருள் எனப்படும் இன்பம் தரும் வளர்ப்புத் தாயால் வளரும்.

Thirukkural 757

திருக்குறள்  காலை வணக்கம்


*குறள் 758:* குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. *கலைஞர் விளக்க உரை:* தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக் கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப் போன்று இலகுவானது.

Thirukkural 758

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 759:* செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃதனிற் கூரிய தில். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* எதையும் சாதிக்க எண்ணுவோர் பணத்தைச் சம்பாதியுங்கள்; பகைவரின் அகங்காரத்தை அறுக்கும் கூரிய ஆயுதம், பணத்தைவிட வேறு இல்லை.

Thirukkural 759

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 760:* ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* நல்ல வழியில் மிகுதியாகப் பணம் சேர்த்தவர்க்கு மற்ற அறமும் இன்பமும் எளிதாக் கிடைக்கும் பொருள்களாகும்.

Thirukkural 760

Thirukkural Kaalai Vanakkam

ENGLISHQUOTESANDWISHESIMAGES

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad