Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் - 77 படை மாட்சி ஸ்டேட்டஸ்

*குறள் 761:* உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. *கலைஞர் விளக்க உரை:* எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச்சிறந்த செல்வமாகும்.

Thirukkural 761

Thirukkural Kaalai Vanakkam Image



*குறள் 762:* உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது. *கலைஞர் விளக்க உரை:* போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.

திருக்குறள் 762 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam Image


*குறள் 763:* ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். *கலைஞர் விளக்க உரை:* எலிகள் கூடி கடல்போல் முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.

Thirukkural 763

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 764:* அழிவின் றறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

Thirukkural 764

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 765:* கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. *மு.வ விளக்க உரை:* எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.

Thirukkural 765

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 766:* மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. *சாலமன் பாப்பையா விளக்க உரை:* வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசின் நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.

Thirukkural 766

Kaalai Vanakkam Thirukkural


*குறள் 767:* தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. *கலைஞர் விளக்க உரை:* களத்தில், முதலில் எதிர்கொள்ளும் போரைத் தாங்கித் தகர்க்கும் ஆற்றலை அறிந்திருப்பின், அதுவே வெற்றி மாலை தாங்கிச் செல்லக்கூடிய சிறந்த படையாகும்.

Thirukkural 767

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 768:* அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். *கலைஞர் விளக்க உரை:* போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்.

Thirukkural 768

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 769:* சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. *கலைஞர் விளக்க உரை:* சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.

Thirukkural 769

Thirukkural Kaalai Vanakkam


*குறள் 770:* நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். *சாலமன் பாப்பையா விளக்க உரை:* சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.

Thirukkural 770

Kaalai Vanakkam Thirukkural

ENGLISH QUOTES AND WISHES IMAGES

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad