Type Here to Get Search Results !

18 காதல் சோகக் கவிதைகள் இமேஜ் | Tamil Sad Kavithai And Quotes Image

காதல் என்னும் புத்தகத்தை
படிக்க தொடங்கும் முன்.
கண்ணீர் என்னும் கடைசி
பக்கத்தை பார்க்க தயாராகிவிடு.
1 of 18
Kadhal sad quote

ஜாக்கிரதையாக இருங்கள்.
காதலும் சிகரெட்டும் ஒன்று தான்.
இரண்டும் முதலில் உதட்டுடன் விளையாடும்.
பின்பு இதயத்தையே புண்ணாக்கி விடும்.
2 of 18
Sad tamil love quote image

மெளனித்த நிமிடங்கள்,
மரண வலியை விட கொடியது.
மறக்கவும் முடியாமல்,
உன்னை மறுக்கவும் முடியாமல்
தவிக்கிறேன் காதல் நினைவோடு..!
3 of 18
Mounam sad kavithai

காதலும் கடந்து போகும்.
ஆனால், காதலித்தவர் முகமும்,
நினைவுகளும் ஒரு போதும்
மறந்து போகாது மரணம் வரை...!
4 of 18
Sad kadhal kavithai

நான் வெறும் வெள்ளை காகிதம் தான்.
ஏங்குகின்ற மனதில் ௭ப்போதும் உந்தன் ஞாபகம் தான்.
என்னை கசக்கி எரிந்து விட்டாய்
என்னுள் காதல் எனும் வார்த்தையை எழுதி.
நான் இங்கே வருத்தத்தில் துடிக்க அதுவும் ஒரு காரணம் தான்!
5 of 18
Tamil sad love quote

நீ கூடவே இருக்க வேண்டும்
என்பது கூட இல்லை...!
கூடவே இருப்பதாக எப்படியேனும்
என்னை நம்ப வைத்துவிடு...!
வாழ்ந்து விடுவேன் மீதி காலத்தை...!
6 of 18
Sad kadhal kavithai

என் காதலே...!
நீ இல்லை என்று மறுத்தாலும்.
என் தலையணையை நனைந்த,
கண்ணீர் சொல்லும்.
நான் உன் மீது கொண்ட காதலை.
7 of 18
Sad love quote tamil

அழ வைத்தது நீ என்று தெரிந்தும்,
அடம் பிடிக்கிறது என் கண்கள்.
உன்னை காண வேண்டும் என்று.
8 of 18
Sad love kavithai image

நீ இல்லாத வாழ்க்கையை
நிம்மதி இல்லாமல் வாழ்வதை விட,
உந்தன் நினைவுகளோடு
கல்லறையிலாவது,
நிம்மதியாக வாழ்ந்து விடுவேன்...!
9 of 18
தமிழ் சோக கவிதை

என் கண்ணீரை துடைப்பாய் என்று
நம்பிய உன்னால் தான் என்
மிஞ்சிய புன்னகையும் பறிபோனது.
10 of 18
Dp for him tamil

உன்னை சிரிக்க வைக்க நான்
கோமாளியாக கூட மாறினேன்.
நீ என்னை ஏமாளியாக ஆக்குவாய்
என்று தெரியாமல்...!
11 of 18
Joker tamil status image

என் காதலே உன்னுடன்
நான் வாழ்ந்த நாட்களை விட,
காதலே உன் நினைவுகளுடன்
வாழ்ந்த நாட்கள் தான் அதிகம்.
12 of 18
Ninaivugal sad quote

நீ என்னை வெறுத்து சென்றாலும்..!
உன் நினைவுகள் மட்டும் தினமும்,
என்னிடம் பேசி செல்கிறது.
நம் காதல் கதைகளை...!
13 of 18
Sad tamil quote

நம்ம என்ன தான் அன்பு பாசத்தை
திகட்ட திகட்ட அள்ளிக் கொடுத்தாலும்.
பதிலுக்கு அவங்க நமக்கு தருவது
வலியும் வேதனையும் ஏமாற்றம் மட்டும் தான்.
14 of 18
Tamil sad life quote

வலிகள் பழக்கமான பின்
தனிமையே நிரந்தரமானது.
ஆறுதலும், அரவணைப்பும்
தேவைப்படுவதும் இல்லை.
எதுவாக இருந்தாலும்
அதுவே வந்து, அதுவே போய்விடும்.
"எறுமை மாட்டுக்கு மழை பெய்தால்
என்ன!
வெயில் அடித்தால் என்ன!"
என்பது போல் ஆகிவிட்டது வாழ்க்கை...!
15 of 18
Sad life quote in tamil

என்றாவது ஓர் நாள்...!
என் கல்லறையை காண நேர்ந்தால்,
உன் கணவனிடம் அறிமுகப்படுத்தி வை.
''இவன் என்னால் சாகடிக்க பட்டவன்'' என்று.
16 of 18
Kallarai kavithai

நான் கல்லறைக்கு செல்லும் முன்பாவது சொல்லிவிடு,
நான் உன்னை காதலிக்கிறேன் என்று...!
தயவுசெய்து என் கல்லறையில் வந்து சொல்லிவிடாதே,
நான் உன்னை காதலிதேன் என்று...!
குழி தோண்டியவன் உழைப்பு வீணாகிவிடும்...!
17 of 18
கல்லறை கவிதை

சுலபமாக சொல்கிறாய் மறந்து விடு என்று.!
எப்படி மறப்பது என்று சொல்லாமல்.!
எதை மறப்பது.? எப்படி மறப்பது.?
உன்னுள் தொலைந்த என்னையா.?
இல்லை என்னுள் தொலையாமல்
இருக்கும் உன் நினைவுகளையா..?
18 of 18
சோக கவிதை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad