Type Here to Get Search Results !

11 நினைவுகள் கவிதை இமேஜ் | Ninaivukal Kavithaigal Image

மௌனமாக இருந்து கொள்ளை அடித்தாய்
என் மனதை...
இன்று கொலையும் செய்கிறாய்.
கொண்டு சென்று விடு உன் நினைவுகளை.
எனை கொன்று புதைக்கிறது தினமும்.
1 of 11
Kadhal ninaivukal kavithai

கனவுகள் இல்லாத
இரவுகள் உண்டு.
ஆனால் உன் நினைவுகள்
இல்லாத இரவுகள் இல்லை.
2 of 11
Ninaivugal kavithai

உன்னை சுமக்க வரம் கேட்டேன்.
கொடுத்தான் ஆண்டவன்,
உன் நினைவுகளை சுமக்க வரம்,
ஆயுள் முழுவதும்...!
3 of 11
Tamil kavithai ninaivukal

உன்னை ஒரு முறை சுற்றி பார்!
உன் நிழல் இருக்கிறதோ இல்லையோ!
ஆனால் என் நினைவுகள் உன்னை சுற்றியே இருக்கும்.
இன்றும் என்றும் என்றென்றும் பிரியமுடன்.
4 of 11
Kadhal ninaivukal kavithai

மௌனமாக இருப்பதால் மறந்துவிட்டேன்
என்று நினைத்து விடாதே.
மரணமே வந்தாலும் மறக்க மாட்டேன்
உன்னையும் உன் நினைவுகளையும்.
5 of 11
Ninaivagal kavithai

தனிமையில் வாடும் ஒவ்வொரு நொடியும்.
உன் நினைவுகளை தேடுகிறேன்.
உன் நினைவுகளும் உன்னை போன்று தான்.
கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது என்னை.
6 of 11
Tamil ninaivugal kavithai

நினைவுகள் என்பது உயிரோட்டமானது.
சில நினைவுகள் மனதை ரணமாக்கும்.
சில நினைவுகள் புன்னகைக்கும்.
இவை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை.
7 of 11
நினைவு கவிதை

நிஜத்தில் நீ தூரமடி
நினைவில் நீ
என்றுமே நெருக்கமடி.
8 of 11
Tamil kavithai image

உன்னை மறக்கவேண்டும் என்று
உன் நினைவை விட்டு விலகி ஓடுகிறேன்.
நான் ஓடும்போதெல்லாம் நிழலாக
உன் நினைவுகளே என்னை துரத்துகிறது.
எங்கும் நிறைந்திருக்கும் வானம் போல்,
உன் நினைவுகளே என் மனவானில் நிரந்தரம்.
9 of 11
Tamil sad love quotes

காட்டுக்குள் நடந்து சென்றால்
சட்டையில் ஒட்டி கூடவே வரும்
ஒட்டுப்புல் போல், கடல் தாண்டியும்
கூடவே வருகிறது உன் இனிய நினைவுகள்.
10 of 11
Un ninaivu kavithai

மழை சாரல் நின்ற பின்பும்
இலைகளில் தங்கி நிற்கும் நீர் போல்,
நீ என்னை பிரிந்த சென்ற பின்பும்
உன் நினைவுகள் என்னில் தங்கிவிட்டது.
11 of 11
Ninaivukal kavithai image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad