Type Here to Get Search Results !

18 தமிழ் சோக வரிகள் இமேஜ் | காதல் | வாழ்க்கை | Tamil Sad Quotes

என் உறக்கத்தை பறித்த நீ
என் உயிரையும் பறித்திருக்கலாமே.
உறங்கினால் தான் கனவு வரும்.
அந்த கனவில் தான் உன் நினைவு வரும்.
என் காதலுக்கு கனவு கூட கை கூடவில்லையடி!
1 of 18
Tamil soga kavithai

நீ எளிதாக மறக்க சொல்லி விட்டாய்.
காதல் என்ற சொல் கேட்டாலே உன்
முகம் தான் கண் முன் வருகிறதடி.
இறப்பது கூட முடியும் என்னால்.
மறப்பது என்பது முடியாது...!
2 of 18
Kadhal soga kavithai

இதயக்கதவை உன் நினைவுகள் தட்ட,
உன் நினைவுகளை வந்து வரவேற்க்க
மெல்ல எட்டிப் பார்க்கிறது என்
விழிகளில் கண்ணீர்.
3 of 18
Un ninaivugal sad quote

மறந்து வாழ்வது ஒவ்வோரு நாளும்
மரண வலியை தருகிறது.
அதை மறைத்து வாழ்வது என்பது💔..!
ஒரு முறை தான் காதல் செய்தேன்
வாழ்க்கை முழுவதும் வலியை கொடுத்தாய்.
4 of 18
Kadhal soga kavithai

கனவே நிலையாய் ஆனது.
நீ வந்து செல்வதால்.
வாழ்வே ரணமாய் ஆனது.
என் நினைவில் நீ இருப்பதால்.
கண்கள் கண்ணீர் சுமக்கிறது.
நிஜத்தில் நீ தொலைந்ததால்.
இருந்தும் என் காதல் நீ தான்.
முதலும் கடைசியும் உயிர் உள்ள வரை.
5 of 18
Tamil sad quote

அன்று உன்னை அணு அணுவாக
ரசித்த குற்றத்திற்காக,
இன்று அனுபவிக்கிறேன்.
அணு அணுவாக வலிகளை...!
6 of 18
Kadhal vali kavithai

நீ இல்லாத வாழ்க்கை,
நிலவு இல்லாத வானம்.
இரண்டுமே அழகு இல்லை
இருண்ட வாழ்க்கை தேவையும் இல்லை.
7 of 18
Nee illatha valkkai

அன்று உன் கண்மையை
ரசிக்காமல் இருந்திருந்தால்.
இன்று என் பேனா மை தீராமல் இருந்திருக்கும்.
8 of 18
Kan mai quote

மறக்க சொல்லி கடந்து சென்று விட்டாய்.
மறக்கவும் முடியவில்லை
கடக்கவும் முடியவில்லை.
காதல் அழகானது தான். அனால்,
அது தரும் வலிகளோ ஆழமானது.
9 of 18
காதல் வலி கவிதை

யாரையும் காயப்படுத்தாமல் வாழ்ந்தவர்கள்.
போகும் போது அனைவரையும்
காயப்படுத்தி விடுகின்றனர்.
10 of 18
Maranam kavithai

என்ன தான் எனக்கு நானே
ஆறுதல் சொன்னாலும்.
சில நினைவுகள் கண்களின்
வழியே கன்னத்தை வருடுகிறது.
கண்ணீரால்.
11 of 18
Kanner kavithai

கண்ணீரை துடைக்கும் உறவுகளை விட,
அழ வைத்து வேடிக்கை பார்க்கும்
உறவுகள் தான் அதிகம்.
12 of 18
Uravugal soga kavithai

நாட்கள் நகர்ந்தாலும்.
காலங்கள் கடந்தாலும்.
நீ வந்து சென்ற சுவடுகள் மட்டும்
அழிக்க நினைத்தும் அழியாத
ஓவியமாக என் இதயத்தில்...!
13 of 18
Sad tamil love quote

இமை மூட மறுத்து. இதயம் பேச துடித்து.
வாழ்க்கை முழுவதும் வெறுத்து.
கண்ணீருடன் கழிகிறது.
என் வாழ்க்கை நீ இல்லாமல்...!
14 of 18
Kanner kavithai sad

கிழிக்க மனம் இன்றி பத்திரப்படுத்திய
உன் கடிதங்களை படிக்கும் போதெல்லாம்
கிழிகிறது என் மனம்.
15 of 18
Love letter tamil sad quote

எது அதிக வலியை தரும்...?
மரணமா...? இல்லை பிரிவா...?
இரண்டும் இல்லை
விட்டுச்சென்ற ஞாபகங்களும்.
பேசி சென்ற வார்த்தைகளும் தான்...!
16 of 18
Tamil sad quote

துக்கத்தை தந்து போன நீ...
என் தூக்கத்தை கொண்டு போனதை
அறிவாயா! தூக்கம் தொலைத்த எனக்கு
ஒரே ஆறுதல் என் உள் துள்ளி திரியும்
உன் நினைவுகள் மட்டுமே...!
17 of 18
Sad love quote image tamil

மறக்க வேண்டுமென்று தான் நினைக்கிறேன்
ஆனால், மீண்டும் மீண்டும் ௮தையே தான்
நினைக்கிறேன் மறக்க முடியவில்லை.
பதிந்தது கண்களில் வடிந்தது இதயத்தில்.
காதல் இதுதானோ காதலின் வேதனை இதுதானோ.
18 of 18
Kadhal vali dp

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad