Type Here to Get Search Results !

திருக்குறள் அதிகாரம் 122 - கனவுநிலை உரைத்தல் - ஸ்டேட்டஸ்

குறள் 1211:
காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து
மு.வ உரை:
(யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?

திருக்குறள் 1211 ஸ்டேட்டஸ்

காலை வணக்கம் திருக்குறள்

குறள் 1212:
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்
மு.வ உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், (அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

திருக்குறள் 1212 ஸ்டேட்டஸ்

Thirukkural Kaalai Vanakkam

குறள் 1213:
நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்
மு.வ உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

Thirukkural 1213 status

காலை வணக்கம் திருக்குறள்

குறள் 1214:
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு
மு.வ உரை:
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

Thirukkural 1214 status

Thirukkural Kaalai Vanakkam

குறள் 1215:
நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது
மு.வ உரை:
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

Thirukkural 1215 status

Thirukkural Kaalai Vanakkam

குறள் 1216:
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்
மு.வ உரை:
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

Thirukkural 1216 status

Thirukkural Kaalai Vanakkam

குறள் 1217:
நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது
மு.வ உரை:
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

Thirukkural 1217 Status

திருக்குறள் காலை வணக்கம்

குறள் 1218:
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து
மு.வ உரை:
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.

Thirukkural 1218 Status

Thirukkural Kaalai Vanakkam

குறள் 1219:
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்
மு.வ உரை:
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை (அவர் வராத காரணம் பற்றி) நொந்து கொள்வர்.

Thirukkural 1219

Thirukkural Kaalai Vanakkam

குறள் 1220:
நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்
மு.வ உரை:
நனவில் நம்‌மை விட்டு நீங்கினார் என்று காதலரைப் பழித்து பேசுகின்றனரே! இந்த ஊரார் கனவில் அவரைக் காண்பதில்லையோ?

Thirukkural 1220

Thirukkural Kaalai Vanakkam

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad