Type Here to Get Search Results !

22 வாழ்க்கை மேற்கோள்கள் | Life Quotes In Tamil

கண்ணீர் வரலாம்
கண்கள் உள்ளவரை.
கவலைகள் வரலாம்
காலங்கள் உள்ளவரை.
இவை இரண்டும்
நிச்சயம் மறையும்
நம்பிக்கை உள்ளவரை.

Tamil Inspiration Life Quote

தள்ளி விட்டவனிடம் சொல் நண்பா!
படைத்தவன் துணை மட்டும் போதும்.
நான் மீண்டும் எழுந்து வர என்று!

Tamil life quote

எதிர் பார்ப்புகள் எப்போதும்
ஏமாற்றம் தருவது இல்லை.
நாம் யாரிடம் எதிர்பார்க்க வேண்டும்
என்பதில் தான் ஏமாந்து போகிறோம்.

Tamil life quote

கோபம் என்பது வலுவான காற்றை போன்றது.
சற்று நேரத்தில் தணிந்து விடும்.
ஆனால் அதற்குள் பல மனக்
கிளைகளை அது முறித்திருக்கும்.

Angry tamil quote

நமக்கு யார் பாரமாக இருந்தாலும்,
நாம் யாருக்கும் பாரமாக
இருந்து விடக்கூடாது.

Tamil life quote

மேகம் இன்றி மழை இல்லை!
நீ இன்றி நான் இல்லை!
வரிகள் இன்றி கவிதை இல்லை!
வலிகள் இன்றி வாழ்க்கை இல்லை!

Tamil life quote ststus

நீ உனக்காக வாழ்.
பிறருக்காக நீ வாழ்ந்து விட்டு,
பின் நோக்கி பார்த்தால்,
உனக்காக ஏதும் இருக்காது.

Tamil life quote

கிடைக்காதவனுக்கு
ஏக்கமாய் இருக்கும்.
கிடைத்தவனுக்கோ
அலுத்துப் போய் இருக்கும்.
அவ்வளவு தான் வாழ்க்கை.

Tamil quote for life

உன்னை புரிந்து கொள்ளாதவர்கள்
நிறைந்த இடத்தில், நீ கோமாளிதான்.
பொறுமையாய் இரு, எந்த நேரத்திலும் 
உண்மையாய் இரு, அவ்வளவு தான்.

Tamil life quote

தூய்மை இல்லா இதயத்தில்
உண்மையை காண இயலாது.
உண்மை இல்லா இதயத்தில்
உயிர் வாழ இயலாது...!

Tamil life quote


கண்ணில் பட்டது எல்லாம்!
இதயத்தில் நிற்பதில்லை!
இதயத்தில் நிற்கும் எல்லாம்!
அருகில் இருப்பதில்லை!
இது தான் இங்கு வாழ்க்கை!

Heart tamil quote

வாழ்க்கையில் உண்மைக்கு கிடைக்காத
மதிப்பும் மரியாதையும்
வேசத்துக்கு கிடைக்கிறது.
நாம் மட்டும் உண்மையாக இருந்து
என்ன பயன் என்று
எண்ண வைத்து விடுகிறது வாழ்க்கை.

Tamil life quote

"நான் ஈவு, இரக்கம் பார்ப்பதே இல்லை."
இது நான் சொன்னது இல்லை.
"வாழ்க்கை" என்னிடம் சொன்னது.

Tamil quote for life

அழ வைத்து
பின் தான் வாழ
வைக்கும் போலும்!
😂இந்த வாழ்க்கை.😂


உணர்வுகள் எங்கு
மதிக்கப்பட வில்லையோ!
அங்கு,
சிரித்தும் பயன் இல்லை.
அழுதும் பயன் இல்லை.


நம் காலை பிடித்து
பின் நம் கையை பிடித்து
உயர்ந்துவிட்டு.
உயர்ந்த பின் நம் தலை மீதே
கை வைக்கின்றனர் மனிதர்கள்.


கெட்டதுக்கே
ஒரு காலம் வரும் போது,
நல்லதுக்கு
ஒரு காலம் வராமலா போய்டும்.
காலம் பதில் சொல்லும் காத்திருப்போம்.


நல்லவன் கெட்டவன் என்பதை
தீர்மானிப்பது சூழ்நிலைதான்.
மானை புலி அடித்தால்,
புலியின் குட்டிகளுக்கு அது நல்லது.
மானின் குட்டிகளுக்கு அது கெட்டது.


மானுக்காக இறக்கப்படும் யாரும்,
சிங்கத்தின் பசியை உணர்வது இல்லை.


அழகிய சிறகொன்று வேண்டும்.
கவலை மறந்து சிறகடிக்க.
இறுகிய மனமொன்று வேண்டும்.
கவலைகளை அதில் சிறைபிடிக்க.


என் ஒவ்வொரு தேடலிலும்.
ஏதோ ஒன்று கிடைக்கிறது
புதிதாய். என் தேடலை தவிர.


சிக்கல் இல்லாத வாழ்க்கை இல்லை.
சிக்கல் என்று நினைத்தால்
முடியை பின்ன முடியாது.
வாழ்க்கையை வாழ முடியாது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad