Tamil Social Quotes | Tamil Political Quotes | Tamil Voters Quotes
இரு மனம் போகும் பாதையில்
மலர் தூவி மணம் செய்ய
மறுப்பவன்,
பிணம் போகும் பாதையில்
மலர் தூவி மரியாதை செய்கிறான்.
1 of 33
தராசிற்கு நியாயம் எல்லாம் தெரியாது.
எந்த பக்கம் கனமாக இருக்கிறதோ
அந்த பக்கம் சாய்ந்து விடும்.
இந்த உலகமும் அப்பத்தான் போலும்.
2 of 33
கையூட்டு வாங்கிக் கொண்டு வேலை
செய்பவனுக்கு கொடுக்கும் மரியாதையை,
கையூட்டு வாங்காமல் அதே வேலையை
செய்பவனுக்கு கொடுப்பதில்லை உலகம்.
உலகத்தின் பார்வையில் அவன் ஏமாளி.
உண்மை: மனிதம் உள்ள மனிதன் அவன்.
3 of 33
ஊரடங்கு அறிவிப்பை கேட்டதும் ஓடிச்சென்று
வாங்கியது தங்கமும் வெள்ளியும் அல்ல.
உயிர் வாழ தேவையான உணவினை.
உணவின் தேவையை உணர்வோம்.
விதைப்பவன் பெருமையை அறிவோம்.
4 of 33
அவனவன் படைப்புக்கு அவனவன் விலை வைக்கிறான்.
காப்புரிமை வேறு வாங்கிக்
கொள்கிறான்.
விவசாயின் படைப்புக்கு மட்டும் விலைவைக்கும்
சுதந்திரமும் இல்லை, காப்புரிமையும் இல்லை.
5 of 33
பாதிக்கப் பட்டவரும் நீதி கேட்கிறார்.
பாதிப்பை கொடுத்தவரும் நீதி கேட்கிறார்.
நீதி கேட்பது யாராக இருந்தாலும்,
நீதி கொடுப்பது என்னமோ
பணம் தான்.
6 of 33
திரையில் தோன்றுபவன்
எல்லாம் கடவுள் இல்லை.
கூலிக்கு கூத்தாடி செல்லும்
கூத்தாடி தான் அவன்.
7 of 33
அமைதியாக இருப்பவர்கள்
பேசும் உண்மையை விட,
சத்தமா பேசுபவர்கள் பேசும்
பொய்க்கு இந்த சமுதாயத்தில்
மதிப்பும் மரியாதையும் அதிகம்.
8 of 33
"வந்தவனை எல்லாமல் வாழவைக்கும்
தமிழகம்" என்று சொல்லி சொல்லியே,
தமிழனை கைதட்ட வைத்து,
"ராஜா"வாகவும் "மந்திரி"யாகவும்
ஆண்டு அனுபவித்து விட்டனர்.
9 of 33
மக்களே! நம் கஷ்ட நஷ்டத்தை
புரிந்து கொண்ட யாராவது ஒருவருக்கு,
நம் சமகால பிரச்சினைகளுக்கு
குரல் கொடுத்த யாராவது ஒருவருக்கு,
உங்கள் வாக்கை தாருங்கள்.
நாடு நாடாக இருக்க வேண்டும்.
சுடுகாடு ஆகிவிடக் கூடாது.
10 of 33
ஜனநாயக நாட்டில் நம் ஓட்டை
நாம் போடுவது, நம் உரிமை, நம் கடமை.
வெறுப்பிலும், கடுப்பிலும் நோட்டாவில் போட்டால்,
இந்த நாட்டின் பார்வையில் நீயும் நோட்டா தான்.
ஜனநாயகத்தை காப்பது நம் கடமை!
காப்போம் ஜனநாயகத்தை!
படைப்போம் புது பாரதத்தை!
11 of 33
ஒரு ஓட்டில் என்ன மாற்றம்
வந்து விடப்போகிறது என்று
மெத்தனமாக இருந்து விடாதே.
உன்னைப்போல் பத்து பேர்
நினைத்து விட்டால் அதுவே
மோசமான மாற்றத்தின் தொடக்கம்.
12 of 33
கருப்பு மை உங்கள் இடக்கை ஆள்காட்டி விரலில்
வரும் முன் நீங்கள் சிந்திக்க வேண்டியது,
நடந்ததையும், நடந்து கொண்டு இருப்பதையும்.
பின் உங்கள் வலக்கை ஆள்காட்டி விரல்
கண்டிப்பாக சரியாக செயல்படும்.
பணநாயகம் அழிந்து ஜனநாயகம் காக்கப்படும்.
மலரட்டும் புதிய பாரதம்!
13 of 33
ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை
கையில் எடுத்தால் தவறில்லை.
கையில் எடுக்கும் சர்வாதிகாரம்
ஜனநாயகத்தை பாதிக்குமே
ஆனால் அது 100% தவறு தான்.
14 of 33
பணத்துக்காக உடலை விற்பது
விபச்சாரம் என்றால்,
பணத்துக்காக நாட்டை விற்பதும்
விபச்சாரம் தானே!
15 of 33
அரசியல் என்பது பொது வாழ்க்கை.
பொது வாழ்க்கையில் இருப்பவர்கள்,
தன்னை தன் நாட்டுக்காக அர்பணித்தவராக
இருக்க வேண்டும்.
தன் வீட்டுக்காக அர்ப்பணித்தவராக
இருக்கக் கூடாது.
16 of 33
ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும்
ஒருமுறை ஓட்டுபோடுவதன்
நோக்கம் நல்லாட்சி மட்டுமே.
அவர்கள் கொடுக்கும் ₹000 அல்ல.
17 of 33
உன் நன்றி விசுவாசத்தை ஓட்டுக்கு
பணம் கொடுத்தவனிடம் காட்டாதே.
அவன் கொடுத்தது உன் பணம் தான்.
இனி அவன் சம்பாதிக்க போவதும் உன் பணம் தான்.
18 of 33
அரசு ஏற்றும் சட்டமும் திட்டமும்
5% மக்களுக்கு மட்டுமே சாதகமாக
அமைந்தால், அது மக்களுக்கான
அரசும் இல்லை! மக்களாட்சியும் இல்லை!
19 of 33
மக்கள் நலன் விரும்பும்
எந்த ஒரு அரசும்
மக்களுக்கு எதிராக
செயல்படுவதில்லை.
20 of 33
மக்களுக்கு எதிராக செயல்படும்
யாராக இருந்தாலும்,
அவர்கள் பெயர் மக்கள் மனதிலும்,
வரலாற்றில் சுவடிலும்,
"துரோகி" என்றே பொறிக்கப்படும்.
வெறும் "துரோகி" இல்லை "பச்சை துரோகி".
21 of 33
ஏழையை அழிப்பது வளர்ச்சியா?
ஏழ்மையை ஒழிப்பது வளர்ச்சியா?
ஏழ்மையை ஒழிங்கடா முதலில்.
இல்லை முயற்சியாவது செய்ங்கடா.
22 of 33
அரசியல் என்பது தன் நாட்டு மக்களை
காத்து வளர்த்து வாழ வைப்பது.
தன் வீட்டு மக்களை வாழ
வைப்பது அல்ல.
23 of 33
மன்னர் ஆட்சியை ஒழித்து விட்டோம்.
ஆனால் அதை மறந்து விட்டோம்.
24 of 33
அனைத்திற்கும் தகுதி தேர்வின்
தேவை இருக்கும் போது,
என் தேசத்தை ஆளும்
தலைவனுக்கு மட்டும் தகுதி தேர்வின்
தேவையில்லாமல் போனது ஏனோ!
25 of 33
துரோகிகள் மீது நம்பிக்கை
வைத்ததற்கு கவலை கொள்ளாதே.
நீ வைத்த நம்பிக்கை தான்
உனக்கு காட்டிக் கொடுத்தது.
துரோகியை, துரோகத்தின் வலியை.
இனி கற்றது போதும், பட்டது போதும்,
விழித்துக் கொள் நண்பா!
26 of 33
மக்கள் துயர் கண்டு
கொதிப்பவன் மக்களில் ஒருவன்.
அவனை காப்பதும் வளர்ப்பதும்
நம் மக்களின் கடமை.
27 of 33
அரசியல் என்பது ஒரு தியாகம்.
அரசியல் என்பது மக்கள் சேவை.
தூய அரசியல் என்பது
தன்னலம் விரும்பா நிலை.
28 of 33
இலவசம் என்பது தூண்டில் புழு.
சிக்காமல் தவிர்ப்பதும்,
சிக்கி தவிப்பதும் அவரவர் கையில்.
சிந்தித்து செயல்படு நண்பா!
29 of 33
நாம் ஜாதி மதத்தால் பிளவு பட்டால்,
அது எதிரிக்கு கொண்டாட்டம்.
நாம் ஜாதி மதத்தை தள்ளிவைத்து
தமிழன் என்று ஒன்று பட்டால்,
அது எதிரிக்கு திண்டாட்டம்.
30 of 33
வாக்குக்கு பணம் கொடுப்பவன் பாவி,
பணத்தை பெற்று வாக்கு
செலுத்துபவன் தேச துரோகி.
- முத்துராமலிங்க தேவர்
31 of 33
தன் உரிமையை காக்க போராடுபவன்
தேச துரோகியும் இல்லை.
சமூகத்தின் நலனுக்காக போராடுபவன்
சமூக வீரோதியும் இல்லை.
32 of 33
ஓட்டு வாங்க தன் கண்ணீர் சிந்துபவன்,
வாங்கிய பின் கண்ணீர் சிந்த
வைப்பான், மக்கள் கண்ணீரை.
33 of 33
வலிகளில் பிறந்த வரிகள்.
கூகுளே துணை!
Thanks For Your Comment...