Type Here to Get Search Results !

தமிழ் சோகக் கவிதைகள் | Sad Quotes In Tamil

காதலித்த நாங்கள் இருவரும்
ஊர்வலத்தில் தான் இருக்கிறோம்.
அவளுக்கு கல்யாண ஊர்வலம்,
எனக்கு இறுதி ஊர்வலம்...!
1 of 16
Sad love quote in tamil

நான் இறந்த பின் தயவுசெய்து
என் கண்களை மூடி விடாதீர்கள்.
எனக்கு அஞ்சலி செலுத்த வந்தாலும்
வருவாள். கடைசியாக ஒருமுறை
பார்த்து விட்டு சென்று விடுகிறேன்.
2 of 16
Soga kavithai

அவள் என் காதலை புரிந்து கொண்டு.
என்னை தேடி வருகிறாள்.
கையில் மலர் வளையத்துடன்.
உறவுகள் மண்இட்டு மூடிவிட்டனர்.
இல்லை என்றால் எழுந்து வந்திருப்பேன்.
3 of 16
Sad tamil love quote

என் வாழ்க்கை என்ன ஓரங்க நாடகமா!
நாடகத்தில் என்னை மட்டும்
நடிக்க விட்டு தனியே சென்று விட்டாய்.
4 of 16
Tamil sad quote

பயப்பட வேண்டாம்
நான் இறந்து விடுவேன் என்று.
அவள் என்னை வேண்டாம் என்று
உதரிய போதே இறந்து விட்டேன்.
மீண்டும் இறப்பது சாத்தியம் இல்லை.
5 of 16
Sad kavithai

என் இதயம் என்ன மண் பானையா.?
நான் அன்பு செய்த அனைவரும்
உடைத்து விட்டே செல்கின்றனர்..!
நேற்று அவள் இன்று நீ..!
ஆனாலும் ஒட்டி வைத்திருக்கிறேன்
தயாராக மீண்டும் உடைபடுவதற்கு.
6 of 16
Tamil sad quote

என் மனதை நீங்கள் உடைப்பது பற்றி
எந்த கவலையுமில்லை எனக்கு.
உடைந்த சிதறல்கள் உங்களை
காயப்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
7 of 16
Sad tamil quote

ஒருவரால் கிடைத்த அதிக மகிழ்ச்சி,
அவர் இல்லை என்று ஆனவுடன்
அளவுக்கு அதிகமாகி விடுகிறது
மறக்க முடியாத வலிகளாக...!
8 of 16
Sad quote in tamil


காதலால் வந்தது வினை.
கண்கள் கண்ணீர் சிந்தி
கட்டியது  அணை..!
9 of 16
Tamil sad love quote

என்னை பிடிக்கவில்லை என்று
சொல்லி இருந்தால் கூட சிறிது
நாட்களில் மறந்திருப்பேன்னடி.
பிடித்திருக்கிறது என்று சொல்லி
என்னை பித்து பிடிக்க வைத்து விட்டாய்யடி..!
10 of 16
Sad love quote tamil

பிரிந்து போன உன்னையும்.
இறந்து போன நம் காதலையும்.
ஒவ்வொரு நாளும் புதுப்பித்து
கொண்டே இருக்கிறது உன் நினைவுகள்...!
11 of 16
Tamil sad love kavithai

சூழ்நிலை சில நேரங்களில் பேச விடுவதில்லை.
பேசினால் கேட்பதும் இல்லை.
நீயாவது நிம்மதியாக வாழ்ந்து விடு.
என்று விலகி செல்ல கற்று கொடுத்து விடுகிறது.
12 of 16
காதல் தோல்வி கவிதை

உன்னோடு வாழ்வது மட்டும்
வாழ்க்கை இல்லை.
உன் நினைவுகளுடன்
வாழ்வதும் வாழ்க்கை தான்.
13 of 16
Ninaivugal kavithai

ஒருவரின் வலியை இன்னொருவரால்
புரிந்து கொள்ள இயலாது.
அப்படி புரிந்து கொண்டிருந்தால்,
உடலாலும் உள்ளத்தாலும் காயங்கள்
இன்றி வாழ்வை வாழ்ந்திருப்போம்.
14 of 16
Sad tamil quote

உன் நினைவுகள் தரும் வலிகளை
எழுதி குறைத்து விடலாம் என்று
பேனாவை எடுத்தேன். பேனாகூட
நழுவியது உன்னைப் போலவே...!
15 of 16
Vali kavithai

என்னதான் மனதின் வலிகளை
உன்னிடம் கொட்டி தீர்த்தாலும்
உன்னிடம் கொட்ட இயலாத
வலிகளை என்ன செய்வது...!
16 of 16
தமிழ் சோக வரிகள்


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad