Type Here to Get Search Results !

காதல் கவிதைகள் | காதல் சிந்தனைகள் | Tamil Kadhal Kavithaigal

தொலைந்த என்னை மீட்டு விடலாம் என்று,
தேடி பார்க்கிறேன் ஆனால் முடியவில்லை.
தொலைந்த இடம் உன் இதயம் தான்.
தொலைந்தது என் இதயம் தான்.
மீட்டுத்தருவாயா என்னை எனக்கு.
1 of 15
Kadhal kavithai image

ஒற்றை ரோஜாவை கையில் ஏந்தி
காதலி உன்னை காண வந்தேன்.
என் கையிலிருந்த ரோஜாவும்
காதல் கொண்டது உன்
கூந்தலில் தவழ..!
2 of 15
Roja kavithai

உன்னை தொலைவில் கண்ட போது,
வேடன் கண்ட புறா என நினைத்தேன்.
உன்னை அருகில் கண்ட பின் உணர்ந்தேன்.
இங்கு புறா நீ அல்ல நான் என்று...!
3 of 15
Tamil love quote

நீ கயிறு கட்டி இழுத்திருந்தால்
ஜெயித்திருப்பேன்.
நீ கண்கள் கட்டி இழுத்ததால்
தோற்றுவிட்டேன்னடி உயிரே.
4 of 15
Kangal kavithai

தவிப்பேன் என்று தெரிந்தே
நீ என்னை தவிக்க
விடுகிறாய்யடி..!
5 of 15
Tamil love quote

இமைகளில் பதிந்த உன் முகம்
என்னை விட்டு பிரிந்து செல்லலாம்.
என் இதயத்தில் பதிந்த உன் முகம்
என்றுமே என்னை விட்டு பிரியாது.
6 of 15
Un mugam kavithai

என் இதயத்தை உன்னிடம் கொடுத்து விட்டேன்.
இரண்டு இதயங்களை சுமப்பது கடினம் என்றால்,
உன் இதயத்தை என்னிடம் கொடுத்து விடு.
நம் இதயங்களை நான் சுமைக்கிறேன் சுகமாக.
காலம் உள்ளவரை உயிர் பிரிந்து செல்லும் வரை.
7 of 15
Idham kavithai

அன்பே, கூண்டு பறவையாய்
உன் இதயத்தில் நான் வாழ்வதால்
பறந்து செல்ல முடியாமல் தவிக்கிறேன்.
உன் பாசம் எனும் வலையில் சிக்கி...!
8 of 15
Kadhal varigal

பல புயல்கள் என்னை தாக்கிய போதும்
அசராமல் வீற்றிருந்தேன் நான்...!
உந்தன் ஓர விழி பார்வையால் என்னை
முழுவதுமாய் சிதறடித்தாயே உயிரே...!
9 of 15
Kadhal kavithai

தென்றல் மோதினால் அது இனிமை.
நீர் மோதினால் அது அலை.
வார்த்தை மோதினால் அது கவிதை. என்னவளே,
நம் கண்கள் மோதினால் அது தான் காதலோ?
10 of 15
Kadal quote

என் மேல் உன் கண்களால் போர்
தொடுப்பதை நிறுத்தி விடு.
என்னை காதல் எனும் விலங்கிட்டு
உன் இதய சிறையில் அடைத்து விடு.
11 of 15
Tamil Kadhal kavithai

உந்தன் கூந்தலில் தவழும் மல்லியின் வாசம்
காற்றோடு கலந்து என்னை கடக்காமல்
ஏளனம் செய்யுதடி இம்மணத்திற்கே
உன்மனம் பறிபோகிறதே என்று...?
12 of 15
பூ வாசம்

உன்னிடம் காதல் கொண்டால்
முத்தம் இலவசமா..?
என்னிடம் காதல் கொண்டால்
மொத்தமும் இலவசம் தான்..!
13 of 15
Muttham kavithai

என் நிலவே உன்னை தேடி இரவு முழுவதும்
என் விழிகள் காத்துக்கிடக்கிறது. 
நிலவே உன்னை காணும் வரை
இரவும் பகலும் ஒன்றுதான் என் விழிகளுக்கு.
என் முழு நிலவே உன்னை காணமல்
என் இமைகள் மூடாது என் உயிரே.
14 of 15
காதல் வரிகள்

எழுத மறந்த கவிதை அல்ல
என் காதல்.
நான் எழுதிட துடிக்கும் கவிதை
என் காதல்.
15 of 15
En Kadhal Kavithai

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad