Type Here to Get Search Results !

21 கபடதாரி கவிதைகள் | போலி மனிதர்கள் கவிதை

Fake People Tamil Quotes | நடிப்பு கவிதைகள் | போலி உறவு கவிதைகள் | வேசம் கவிதைகள் | பொய் அன்பு கவிதைகள் | முகமூடி கவிதை | உண்மையான உறவு கவிதை | Fake Relation Tamil Quotes

எல்லோரும் அழகாக நடிக்கிறார்கள்.
நமக்கு தான் தெரிவது இல்லை,
வேசம் கலையும் வரை நடந்தது
அனைத்தும் நாடகம் என்று.
1 of 21
நடிப்பு கவிதை

பாசமாய் நடிப்பவர்கள்
வேஷம் களையும் போது
வீணாய் கோஷம் எழுப்புவார்கள்.
2 of 21
வேசம் கவிதை

என்னதான் கலர் கலரா பெயிண்ட் அடித்தாலும்,
தகரம் என்றைக்கும் தங்கம் ஆகாது.
சில மனிதர்களும் அப்படித்தான்.
3 of 21
Fake People Tamil Quote

முகத்தை வைத்து அகத்தை
முடிவு செய்யாதே!
முகமா இல்லை முகமூடியா
என்று தெரியும் முன்!
4 of 21
முகமூடி கவிதை

எல்லா வகை முகமூடிகளையும்
அணிய தெரிந்தவர்கள்,
வாழ்க்கையில் மிக அழகாக
நடித்து ஜெயித்து விடுகின்றனர்.
5 of 21
முகமூடி கவிதை

ஏமாறாமல் இருப்பதற்கு அறிவு
இருக்க வேண்டும் என்று
அவசியம் இல்லை.
இதயம் இல்லாமல் இருந்தால் போதும்.
6 of 21
ஏமாற்றம் கவிதை

ஒருவரை நம்புவதாக இருந்தால்,
அவர் சொல்லை கேட்டு நம்பாதே.
அவர் செயலை பார்த்து பின் நம்பு.
7 of 21
Trust tamil quote

பொய் பேசி பொய்யுடன் வாழ்வதற்கு,
மெய் பேசி மெய்யுடன்
தனிமையில் வாழ்வது சிறந்தது.
8 of 21
பொய் கவிதை


இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே.
எல்லோரும் ஒருவகை முகமூடியுடனே
சுற்றி வருகின்றனர்.
உன்னை நம்பு. உன் செயலை நம்பு.
9 of 21
Muga moodi Kavithai

எப்போதும் ஒரு கண் விழித்திருக்கட்டும்.
உங்களுக்கு கை தட்டுபவன் கூட
கால்லை வாரும் சந்தர்ப்பத்தை
எதிர்பார்த்து காத்திருக்கலாம்.
10 of 21
Fake People Tamil Quote

நான் நம்பிய உறவு ஓர் உறவு.
அந்த ஓர் உறவும் பொய் என்று
ஆனபின், காணும் உறவெல்லாம்
பொய்யாகவே தெரிகிறது கண்களுக்கு.
11 of 21
போலி உறவு கவிதை

என்னை உன் சுய தேவைக்கு
பயன்படுத்திக் கொண்டால்!
அது எப்போதும் எனக்கு
தெரியாமல் பார்த்துக் கொள்.
எப்போது தெரிகிறதோ அப்போது
முதல் நீயும் உன் நினைவுகளும் எனக்கு,
குப்பை தொட்டியும், குப்பையும் தான்.
12 of 21
Fake People Tamil Quote

என்னதான் நடித்துக் கொண்டே இருந்தாலும்.
சூழ்நிலைகள் மாறும் போது
அவர்களின் சுயரூபம் தெரிந்து விடும்.
13 of 21
சூழ்நிலை கவிதை

உலகமகா நடிகனாக
இருந்தாலும்.
நம் நிலை தாழும் போது
அவர்கள் வேசம் கலைந்து உண்மை தெரிந்து விடும்.
14 of 21
நடிகன் கவிதை

ஒருவரை நண்பராகவோ அல்லது
உறவாகவோ தேர்வு செய்யும் போது,
மிகவும் கவனமாக செயல்படுங்கள்.
ஏனெனில், இங்கு நிஜ முகத்துடன்
சுற்றுபவர் குறைவு.
15 of 21
போலி மனிதன் கவிதை

சிரிப்பவனை
எல்லாம் நம்பி விடாதே.
அவனவன் சிரிப்புக்கு பின்
ஆயிரம் உள் நோக்கங்கள் இருக்கலாம்.
16 of 21
போலி சிரிப்பு கவிதை


தேவையின் போது அட்டை போல்
ஒட்டிக் கொண்ட மனிதர்கள்.
தேவை முடிந்தபின் யாரென்றே
தெரியாதது போல் நடந்து கொள்வது
வலிக்கத்தான் செய்கிறது.
17 of 21
பொய் அன்பு கவிதை

காதலிக்க 'நேரம்' இல்லாமல்
விட்டு விட வில்லை.
காதலில் 'நேர்மை' இல்லாமல்
விட்டு விலகி விட்டேன்.
18 of 21
Fake love tamil quote

போலி உறவுகளை வசதி வாய்புடன்
வாழும் போது பார்க்கலாம்.
உண்மையான உறவை
அசிங்கப்பட்டு அவமானப்பட்டு
வேதனை படும்போது பார்க்கலாம்.
19 of 21
உண்மையான உறவு கவிதை

எல்லா சூழ்நிலையிலும் உடன்
பயணிப்பது உண்மையான
உறவுகள் மட்டுமே.
20 of 21
True Relation Tamil quote

நீங்கள் எப்போது உண்மையான
ஓர் உறவை காண்கிறீர்களோ,
அப்போது முகத்தை தேடாமல்
அகத்தை தேடுங்கள்.
அது வாழ்க்கையை வசந்தம் ஆக்கும்.
21 of 21
Unmai anbu kavithai

ஏதோ என் அனுபவத்தில் பட்டதையும், பார்த்ததையும், படித்ததையும், கேட்டதையும், தெரிந்ததையும் உங்களிடம் சொல்லி விட்டேன். பார்த்து கவனமாக செயல்படுங்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad